Thursday, July 14, 2016

ஐ.எஸ்ஸை உருவாக்கியது டோனி பிளேயரும், ஜோர்ஜ் புஷ்ஷுமே!


ஆங்கிலத்தில்: அஸ்ஸாம் தமீமி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

பதிமூன்று வருடங்களுக்கு முன்னர், அப்போதைய பிரித்தானியாவின் பிரதமர் டோனி பிளேயர், ஐக்கிய இராச்சியத்தை யுத்தத்துக்கு அழைத்துச் செல்வதை, பொய்யான தகவல்களின் அடிப்படையில் நியாயப்படுத்தியிருந்தார்.

வேறு எவருமன்றி, அவர் மட்டுமே அறிந்த காரணங்களுக்காக, அப்போதைய அமெரிக்காவின் நவீனபழமைவாத ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷோடு இணைந்து கொண்டார் டோனி பிளேயர். அப்போது போருக்கு எதிரான இயக்கதிலிருந்த நானும் எனது சகாக்களும், யுத்தத்துக்கு செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து டோனி பிளேயரையும், ஐக்கிய இராச்சிய அரசையும் எச்சரித்தோம்.

எமது ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காது, நாம் எள்ளி நகையாடப்பட்டோம். ஏலவே எம்மில் பலரிடமும் ஆலோசனை சில விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தபோதும், அது முதல் அவ்வாறான ஆலோசனை பெறுவதிலிருந்தும், அரசின் உத்தியோகபூர்வ தொடர்புகளிலிருந்தும் நாம் வெளியேற்றப்பட்டோம். பிளேயர் நிர்வாகம் எம்மை அவமதித்தே நடந்து கொண்டது. சிலபோது நாம் தேசத்தின் எதிரி என்ற தரத்தில் கூட நடத்தப்பட்டோம்.

Friday, July 8, 2016

டோனி பிளேயர் ஒரு போர் குற்றவாளி!


ஆங்கிலத்தில்: ஜெமீ மெரில்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
(ஜெமீ மெரில்லின் கட்டுரையின் முக்கியமான பகுதிகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பரப்பாகவும், பிஸியாகவும் இருந்த பக்தாத் நகரின் கர்ராடா பகுதி தியில் எரிந்துகொண்டிருக்கம் சந்தர்ப்பத்திலும்கூட, கடந்த ஞாயிறு முதல் பல குடும்பங்கள் அங்கு வருகின்றன.

2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டோரின் சடலங்கள் வீதியோரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட இத்தாக்குதலில் 250 அளவிலானோர் கொல்லப்பட்டனர்.

கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட சில்கோட் அறிக்கையின்படி, அமெரிக்காவின் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு அவசியமற்றதொன்றாகும். அப்போதைய ஈராக்கின் தலைவராக இருந்த சத்தாம் ஹுஸைன் உடனடியாக அச்சுறுத்தலாக விளங்காதமையால், அமைதியான மாற்று வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அவ்வறிக்கை சுடு;டிக்காட்டுகின்றது.

இராணுவ ரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் பலமுறை எச்சரிக்கப்பட்டாலும் அவற்றை அவர் புறக்கணித்து விட்டார் என்று ஸர் ஜோன் சில்கோட்டின் ஈராக் விவகாரம் குறித்த விசாரணை குறிப்பிடுகின்றது.

Tuesday, July 5, 2016

துருக்கி - இஸ்ரேல் உடன்படிக்கை காஸா முற்றுகையை நீக்குமா?


ஆங்கிலத்தில்: யுவோன் ரிட்லி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

நாம் ரமழானின் இறுதி நாட்களை கடத்தி வருகின்ற நிலையில், உலகெங்கும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் தர்மங்கள் வழங்கி வருகின்றனர். வழமைபோன்றே, காஸாவும் அதிகளவு தேவைகளைக் கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது.

கடந்த ஒரு தசாப்த காலமாக காஸாவின் நிலை மோசமாக உள்ளது. இஸ்ரேலும், எகிப்தும் காஸாவை சூழ இட்டுள்ள முற்றுகை காரணமாக, மனிதநேய உதவிகளும், காஸாவின் உட்கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்பவதற்கான பணிகளும் தடைப்பட்டுப் போயுள்ளன. காஸாவில் இரண்டு மில்லியன் பலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர்.

எனது தனிப்பட்ட அனுபவத்தின்படி, உதவிகளில் தங்கியிருக்கும் நிலையை பலஸ்தீனாகள் விரும்புவதில்லை என்பதை அறிந்த வைத்திருக்கின்றேன். இருப்பினும், மோசமான முற்றுகை காரணமாக காஸாவில் வாழ்வோர் பெருமளவு வறுமையாலும், கஷ்டத்தாலும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். உண்மை சொல்வதென்றால், மேற்குக் கரையை ஆளும் பலஸ்தீன அதிகார காஸாவின் இந்நிலை குறித்து சந்தோசமாகவே உள்ளது. அரபுலகிலுள்ள பலஸ்தீன அதிகார சபையின் சில கூட்டாளிகளும் இது குறித்து சந்தோசமாகவே உள்ளன.

Sunday, July 3, 2016

சீக்கியமும் முஸ்லிம்களும் பஞ்சாபும்



அஷ்கர் தஸ்லீம்

தலைப்பாகை அணிந்து. முறுக்கு மீசை வைத்த ஆண்களை, ஹிந்திப் படங்களில் அடிக்கடி காண்கிறோம். இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்களின் பெயருக்குப் பின்னால், ‘கான்” (இம்ரான் கான், ஆமிர் கான்…) என்று வருவது போல, இவாகளின் பெயருக்குப் பின்னால் ‘சிங்’ என்ற சொல் இருக்கும். ஆம், நீங்கள் நினைப்பவர்கள்தான் அவர்கள். சீக்கிய மதத்தைப் பின்பற்றும் பஞ்சாபி இனத்தவர்… சீக்கியமும் பஞ்சாபியும் பின்னிப் பிணைந்தவை.
உலகில் 20 மில்லியன் சீக்கியர் உள்ளனர். இவாகளில் பெரும்பாலானோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலேயே வாழ்கின்றனா. அதுபோக, பஞ்சாபிலிருந்து சென்று, கனடாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும், அமெரிக்காவிலும் பல சீக்கியர்கள் குடியேறியுள்ளனர்.
16 ஆம் நூற்றாண்டில் பஞ்சாப் பிராந்தியத்தில் சீக்கிய மதம் ஸ்தாபிக்கப்பட்டது. குரு நானக் என்பவரே சீக்கிய மதத்தை ஸ்தாபித்தவா. அவரைத் தொடர்ந்து 9 சீக்கிய குருக்கள் உருவாகியுள்ளனா. 10 ஆவத குருவான கோபிந்த் சிங், இனிமேல் குருக்கள் உருவாக மாட்டர் என்றும், சீக்கியத்தின் மத நூலான ‘குரு கிரந்த் ஸாஹிப்’ இனிமேல் நிரந்தர குருவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.