Wednesday, October 22, 2014

ரணிலுக்கு வெல்ல முடியுமா?


சுனந்த தேஷப்ரிய
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறலாம் என்ற பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே முன்னிறுத்தப்படுவார். எவ்வளவுதான் சட்ட ரீதியான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் பலத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்தப்படப்போவது மஹிந்த ராஜபக்ஷதான்.

எதுவித ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் இடம் வைக்காமலேயே ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க உள்ளார். அடக்குமுறைதான் அவரின் அரசியல் மூலோபாயம். வடக்கில் தமிழ் மக்களை வெல்வதற்காக, அங்கு உலா வரும் அதேவேளை, வடக்கையும் கிழக்கையும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக உத்தியோகபூர்வமற்ற முறையில் ஆக்கியுள்ளார் ராஜபக்ஷ.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதற்கேற்ப, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வடக்குக்கும் கிழக்குக்கும்; செல்ல முடியாது. இதன் சமூக பொருளாதா விளைவுகள் யாழ் தேவி ரயிலை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்ததையும் விட பாரதூரமானதாகும். இது ராஜபக்ஷவின் தேர்தல் திட்டத்தில் சேதம் உண்டாக்கும் என்பது திண்ணம். என்றாலும், அவரின் அடக்குமுறை அரசியல் மூலோபாயம் தேர்தல் திட்டத்தை விடவும் உயரத்திலேயே இருக்கின்றது.

Monday, October 6, 2014

உடைந்துபோகவுள்ள அரசியல் முறைமையின் குழப்பம்: முடிவு எப்போது?


කඞාවැටෙන්නට යන දේශපාලන ක්‍රමයේ අර්බුදය: අවසානය කුමක්ද?
உடைந்துபோகவுள்ள அரசியல் முறைமையின் குழப்பம்:
முடிவு எப்போது?
விக்டர் ஐவனின் மேற்குறித்த புத்தகம் 52 பக்கங்களைக் கொண்டது. அவர் ஸ்தாபித்த ராவய வெளியீட்டகத்தின் வெளியீடாக இது வெளிவந்துள்ளது.
விக்டர் ஐவன் பற்றி நான் புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. நாடறிந்த பிரபலமான அரசியல் ஆய்வாளர், ஊடகவியலாளர் அவர்.
இந்த புத்தகம் பற்றிய சுருக்கமான அறிமுகத்துக்காக, புத்தகத்தின் முன்னுரையை இங்கு தமிழ்படுத்தியுள்ளேன்.
முன்னுரை
இலங்கையின் அரசியல் முறைமை பெரியதொரு குழப்ப நிலைக்கு உட்பட்டிருக்கின்றது என்று சொல்லலாம். அரசாங்கக் குழப்பங்கள் மக்களுக்கு நன்றாகவே பழகிப்போயிருந்தாலும், அரசியல் முறைமையின் குழப்பம் மக்களுக்கு பழகிப்போனதொன்றல்ல.
அரசாங்கக் குழப்பங்கள் இலகுவானது. எனவே, அவற்றைப் புரிந்து கொள்வதும் இலகுவானது. அரசியல் முறைமையின் குழப்பம் நுணுக்கமானது. எனவே, அவற்றைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலேசானதல்ல.

Sunday, October 5, 2014

காலிக் கோட்டையில் பிடித்த படங்கள்


காலிக் கோட்டையில் பிடித்த படங்கள்










Thursday, October 2, 2014

கணவர்களுக்கு மட்டும்!


ஸஹர் கஸ்ஸைமாஹ்

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்


வீட்டை சுத்தமாக்கி விட்டாயா?
இரவுச் சாப்பாடு தயாரா?
குழந்தைகளுக்கு உணவூட்டி விட்டாயா?
எனது ஆடைகளைக் கழுவி விட்டாயா?

மனைவியை மனைவியாக நோக்காது, தனது பணிப் பெண்ணாகவும், குழந்தைகளைப் பெறும் இயந்திரமாகவும் நோக்கும் கணவர்களிடமிருந்து, பெண்கள் இரவு பகலாக செவிமடுக்கும் கேள்விகள்தான் இவை.

பெண்களும் ஆண்களும் மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். ஆனால், சில கணவர்கள் திருமணத்தில் பொதிந்துள்ள உண்மையான விடயங்களையும், தமது மனைவிமாரின் உரிமைகளையும் மதிக்காது நடக்கின்றமை மிகுந்த கவலைக்குரியதாகும்.

இவர்கள் வெற்றிகரமான குடும்பமொன்றின் அஸ்திவாரமான குழந்தைகளின் சந்தோசம், சகாக்ககள் ஆகியவற்றைப் பிடுங்கிக் கொள்கின்றனர். இவ்வாறான சமநிலையற்ற நிலைமை தொடர்கின்றபோது, குடும்பம் பிரச்சினைகளுக்குள்ளும் கவலைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்கின்றது.

மார்க்க பக்தியுள்ள குடும்பங்களில் கூட, தமது மனைவியரை சரியாகப் புரிந்து கொள்ளாத, திருமணம் முடித்த ஒரு ஜோடிக்கு இடையிலான உறவைப் புரிந்து கொள்ளாத கணவர்களைக் காணலாம்.

Wednesday, October 1, 2014

“ஜின்னா: சர்ச்சைகளும் சாதனைகளும் சமவிகிதத்தில் கலந்த ஒரு சரித்திர புருஷனின் விறுவிறுப்பா வாழ்க்கை”


இந்த வருடமும் (2014) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஆர்வமுள்ள துறைகளிலுள்ள எல்லாப் புத்தகங்களை வாங்கி விட வேண்டும் என்ற ஆசைதான். ஆனாலும், யதார்த்ததம் அப்படியல்லவே. 

நான் வாங்கிய புத்தகங்களில் என்னைக் கவர்ந்த புத்தகம் என்று “ஜின்னா: சர்ச்சைகளும் சாதனைகளும் சமவிகிதத்தில் கலந்த ஒரு சரித்திர புருஷனின் விறுவிறுப்பா வாழ்க்கை”  என்ற புத்தகத்தைச் சொல்லலாம்

இந்தப் புத்தகத்தை தரண என்பவர் எழுதி, இந்தியாவின் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்களில் அவ்வளவு நாட்டம் இல்லாதபோதும், ஜின்னாவைப் பற்றிய நூல் என்பதால் வாங்கிக் கொண்டேன்.

மொத்தமாக 151 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில், முகம்மத் அலி ஜின்னாவின் வாழ்க்கை வரலாறு சுவாரஷ்யமான மொழி நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கின்றது.