Friday, December 20, 2013

பொன் தீவு கண்டல் காணி பிரச்சினை: வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர்கொள்ளும் இன்னுமொரு சவால்!

(அஷ்கர் தஸ்லீம்)

மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொன் தீவு கண்டல் மற்றும் பூவாரசம் குளம் பகுதி தமிழ் கிறிஸ்தவ - முஸ்லிம்களுக்கு இடையிலான காணி சம்பந்தப்பட்ட முறுகல் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பலத்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளால் விரட்டப்பட்டு புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு, பூவாரசம் குளம் மற்றும் பொன் தீவு கண்டல் பகுதிகளுக்கு இடைப்படட பிரதேசத்தில், அரசாங்கத்தால் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகள் தமது பூர்வீக பிரதேசம் என்றும் அவையும் தமக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ் கிறிஸ்தவ தரப்பு கூறி வருகின்றது.

Thursday, December 12, 2013

பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆய்வு மாநாடு

(அஷ்கர் தஸ்லீம்)

பேராதனை பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறையின் ஏற்பாட்டில் 'பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம்' என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 27 ஆம் திகதி, தேசிய ஆய்வு மாநாடொன்று நடாத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்கு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு நிதியுதவி அளித்திருந்தது.

முழுநாள் மாநாடாக நடைபெற்ற இதில் விஷேட பேச்சாளராக கலாநிதி சுக்ரி, விஷேட அதிதியாக பேராசிரியர் தீரானந்த தேரர், சிறப்பு அதிதியாக நீதிபதி சீ.ஜீ வீரமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறை 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் இத்துறையில் பட்டப்பின்படிப்புக் கற்கைகளைக் கொண்டிருக்கின்ற ஒரே பல்கலைக்கழகம் இதுதான்.

Friday, November 8, 2013

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு பற்றிய சுருக்கமான தொகுப்பு

 (அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்)



பொதுநலவாய நாடுகள் என்றால் என்ன?

பொதுநலவாய நாடுகள் (Commonwealth Nations) என்பது பிரித்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழிலிருந்து பின்னர் சுதந்திரமடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். இது உலகில் பழைமை வாய்ந்த அரசியல் கூட்டமைப்புக்களில் ஒன்றுமாகும். இந்த நாடுகள் இணைந்து 1949 ஆம் ஆண்டு பொதுநலவாயத்தை ஸ்தாபித்தன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது இதில் 8 நாடுகளே அங்கத்துவத் தைப் பெற்றிருந்தன.


பொதுநலவாயத்தில் தற்போது 19 ஆபிரிக்க நாடுகளும், 11 தென் பசுபிக் நாடுகளும், 10 கரீபியன் நாடுகளும், 8 ஆசிய நாடுகளும், 3 அமெரிக்க நாடுகளும், 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கத்துவம் பெற்றுள்ளன. பிரித்தானிய சாம்ராஜ்யத்துடன் வரலாற்று ரீதியான உறவுகள் இல்லாதபோதும், ருவாண்டா, மொஸாம்பிக் ஆகிய நாடுகளும் அண்மையில் பொதுநலவாயத்தில் இணைந்து கொண்டுள்ளன. தற்போது மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 54 ஆகும்.

Friday, October 25, 2013

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு பணம் சேர்க்கவே எமது பிராந்தியத்தில் போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகிறது - அதுரலியே ரதன தேரர்

rathana himi mp


நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்இன்ஸாப் ஸலாஹுதீன்

இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனை எந்நிலையில் உள்ளது?

இலங்கையில் போதைப் பொருள் பாவனையின் அளவுசமீபத்தில் அதிகரித்திருப்பதாகத் தெரிகின்றது. போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் முக்கியமான குழுக்களுள் அல்காஈதா இயக்கம் பிரதான இடத்தை வகிக்கின்றது. அவர்களுக்குத் தேவையான பணத்தை இதன் மூலம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். கஸகஸ்தான்ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தப் போதைப் பொருள்களை பாரியளவில் விதைக்க முடியும். எனவேஇவை பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு வந்து,இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் ஒரு முறைமை உருவாகியிருன்றது என்பதுதான் தற்போது பார்க்கக் கிடைக்கும் தகவல்கள்.

இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டு வரும் பிரதான இடமாக பாகிஸ்தான் உள்ளது. இலங்கைக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள போதைப் பொருட்களில் 99 வீதமானவை பாகிஸ்தானிலிருந்தே கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களில், 99 வீதமானோர் பாகிஸ்தானியர்களே

Thursday, October 3, 2013

என்றோ ஒரு நாள் மதச்சார்பற்ற அரசியல் கொண்ட நாடாக இந்த நாடு மாற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்: ராவய, பிரதம ஆசிரியர் கே.டபிள்யூ ஜனரஞ்சன உடனான நேர்காணல்

சட்டத்தரணி கே.டபிள்யூ ஜனரஞ்சன அவர்கள் பிலியன்தலயைச் சேர்ந்தவர். 1991 களில் ராவய பத்திரிகையில் கார்டூன் ஓவியராக இணைந்தார். பின்னர், அதன் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். தற்போது அதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

நேர்காணல் – அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்


நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலை எப்படி நோக்குகிறீர்கள்?

மாகாணசபை தேர்தலை நோக்கும் போது நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்தத் தேர்தல் வடக்கிற்கு மாத்திரம் உரிய தேர்தல்தான். அல்லது வடக்கில் மாத்திரம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலாகும். வடக்கில் அரசாங்கம் தோல்வியைத் தழுவும் என்பதனை அறிந்தே இருந்தது. அதனை சமப்படுத்துவதற்காகவே மத்திய, வடமேல் மாகாணங்களில் தேர்தலை நடத்த வேண்டி வந்தது. வடக்கின் தோல்வியை இந்த இரண்டினதும் வெற்றியைக் கொண்டு சமப்படுத்துவதே இதன் நோக்கம். சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த இரண்டையுமே அழுத்தம் கொடுத்துப் பேசின.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கின் தேர்தல் முக்கியமானது. ஆனால், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் பல புரளிகளைக் கிளப்பியது. சிங்கள பௌத்தர்களுக்கு மத்தியில் இது தனிநாட்டுக் கோரிக்கையை கொண்டது, நாட்டைப் பிரிக்கும் உள் நோக்கம் கொண்டது என்ற கருத்துக்கள் பரப்பப்பட்டன. இது ஜனநாயக நீரோட்டத்தில் அவர்களுக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பமாகும். எனவே, அவர்களது பயணம் எப்படி அமையப் போகின்றது என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

Saturday, September 21, 2013

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக ஒருமைப்பாட்டுக்கான பேரணி


சிறுபான்மைகளுக்கு எதிரான ஒரு இனவாதப் போக்கு இலங்கையில் தலைதூக்கி வருவதை நாம் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் நாட்டில் மீண்டுமொரு இனப் பிரச்சினையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிரான ஒருமைப்பாட்டுக்கான பேரணி (Rally for Unity) என்ற பெயரில் கொழும்பிலும் மாதரையிலும் இரு பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த பேரணிகளை இனம் மதம் சாராது மூவினங்களையும் சேர்ந்த இளம் செயற்பாட்டாளர்கள் இணைந்து நடாத்தியுள்ளனர். ஒருமைப்பாட்டுக்கான பேரணிகளை (Rally for Unity)  ஏற்பாடு செய்த குழுவைச் சேர்ந்த பிரதிபா பெரோ, பிரபுதீபன், அப்துல் ஹாலிக் அஸீஸ் ஆகியோரை மீள்பார்வைக்காக சந்தித்தேன்.
நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

ஒருமைப்பாட்டுக்கான பேரணி (சுயடடல கழச ரnவைல) திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது! இது என்ன?

பிரதிபா பெரேரா:

பிரதிபா பெரேரா
நாம் அன்றாடம் சாப்பிடுகிறோம். அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். இதுபோன்றே கருத்தைச் சொல்வதற்கான சுதந்திரம், நண்பர்களுடன் பழகுதல், சமத்துவம் எனபனவும் எனது அன்றாடத் தேவைகள்தான். ஏனையோருக்குத் தொந்தரவு கொடுக்காது எனது விருப்பம்போல் நண்பர்களுடன் பழகுவதற்கும் எனது கருத்துக்களை வெளியிடுவதற்கும் யாரேனும் தடை விதித்தால் அது பிரச்சினையே.

சமீபத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் என்னைப் போன்றே எனது ஏனைய சகோதரர்களுக்கும் அவர்களது தனித்துவத்தைப் பேணி வாழ்வதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு சாதாரண பிரஜையாக வாழ்வதற்கும் தடையாய் அமைந்து வருகின்றன.

நான் சாப்பிடுவதை யாரேனும் தடுப்பதாயின் நான் அதற்கெதிராகப் பேசுவேன். எனது வீட்டை யாரேனும் பறித்துக் கொள்வதாயின் நான் அதற்கெதிராகப் பேசுவேன். இதுதான் ஒருமைப்பாட்டுக்கான பேரணியின் (Rally for Unity) பின்னணி.


Thursday, August 15, 2013

எதிர்க்கட்சி கொழும்பில் நடாத்திய சமகிபலவேகலய ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில், (14.08.2013) வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி நடத்திய 'சமகி பலவேக' ஆர்ப்பாட்டத்தின்போது நான் பிடித்த படங்கள்.















Monday, July 15, 2013

நாம் கற்பவை ஒரு நாளும் வீணாகப்போவதில்லை. நாம் வியாபாரம் செய்வதாக இருந்தால், நாம் கற்பவற்றைக் கொண்டு அதனை இன்னும் வளர்த்துக் கொள்ளலாம்: ஆபித் ருஷ்தி


ஆபித் ருஷ்தி பதுல்லையைச் சேர்ந்தவர். இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா விமானத்துக்கான தொழினுட்பத்தை கண்டுபிடித்த குழுவில் இவரும் ஒருவர். இது ஆபித்துடன் நான் மேற்கொண்ட நேர்காணல்.


ஆரம்பமாக உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்
நான் ஆபித் ருஷ்தி. எனது ஊர் பதுல்லை. நான் பதுல்லை மத்திய கல்லூரியில் சிங்கள மொழியில் கற்றேன். 2007 உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாவதாகவும் நாடளாவிய ரீதியில் 34 ஆவதாகவும் நான் சிந்தியடைந்தேன். இந்த வருடம் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் டெலிகொமினிகேஷன் பொறியியலாளராக பட்டம் பெற்று வெளியேறினேன்.

எனது தந்தை முஹம்மத் ஸாதுல்லாஹ். அவர் இலங்கை மின்சார சபையில் பொறியியலாளராகக் கடமையாற்றினார். அதிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது குடும்ப வியாபாரமொன்றை நடாத்தி வருகிறார். எனது தாய் இஸ்ஸதுல் வஸீமா ஒரு இல்லத்தரசி. எனது மூத்த சகோதரன் பிஷார் ஹாதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிவில் பொறியியலாளராக பட்டம் பெற்று வெளியேறினார். எனது இளைய சகோதரன் ஸாஜித் உஸாமா கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 ஆவது வருடத்தில் கற்கிறார்.

Monday, June 3, 2013

துருக்கியின் வெளியுறவுக் கொள்கை – ஒரு குறிப்பு


ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் பல காரணிகள் பங்கெடுக்கின்றன. சிந்தனைகள், கோட்பாடுகள், பெறுமானங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச கள நிலவரங்கள், சவால்கள், சந்தர்ப்பங்கள், பல சமநிலை, உள்நாட்டு பாதுகாப்பு, வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள், புவியரசியல் நிலைமைகள், பொருளாதாரம் என்பன இதில் முக்கியமானவை. இந்தப் பின்னணிகளில் நின்றுதான் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதில் ஓரிரண்டு காரணிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மதிப்பீடு செய்வது பொருத்தமில்லை.