பேராசிரியர் அப்துல் அஸீம்
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்
இஸ்லாத்தில்
நிதியளிப்பிற்கான முறையான ஏற்பாடு
இஸ்லாத்தின்
ஆரம்ப காலகட்டத்தில், முறையான நிதியளிப்பின் அடித்தளத்தை
குறிக்கும் முதல் நிறுவனமாக பைதுல்
மால் (நிதி இல்லம்) அல்லது
பொது திறைசேரி அமைந்திருந்தது. அடிப்படையில் இது ஒரு அரச
நிதி நிறுவனமாகும். ஆனால், இது தனிநபர்களுக்கும்
கடன்கள் அல்லது முதலீட்டு மூலதனத்தை
வழங்கியது. இது கலீபாவிற்கும் பொதுமக்களுக்குமான
ஒரு அரச வங்கியாக இயங்கியது.
உதாரணமாக, இரண்டாவது கலீபாவான உமர் (ரழி) அவர்கள்,
வணிக நோக்கத்திற்காக 4000 (திர்ஹம்) தொகையை ஹிந்த் என்பவருக்குக்கு
வழங்கினார் (அத்தபரி, 1407 ஹி., தொகுதி 2, பக்.
576-77).
பொது நிதியிலிருந்து வர்த்தக நோக்கத்திற்காக கடன்
வழங்கப்பட்டதற்கு மற்றொரு உதாரணமும் உள்ளது.
பஸராவின் ஆளுநரான அபூ மூசா
அல்-அஷ்அரி (கி.பி.
662 மற்றும் 672 க்கு இடையில்), பைதுல்மாலுக்கு
வழங்குவதற்காக மதீனாவில் உள்ள மத்திய திறைசேரிக்கு
சிறிது பணம் அனுப்ப வேண்டியிருந்தது.
இஸ்லாமிய கிலாபத்தின் தலைநகரான மதீனாவுக்குப் பயணிக்க விரும்பிய அப்துல்லாஹ்
மற்றும் உபைதுல்லாவுக்கு (உமர் இப்னுல் கத்தாபின்
இரண்டு மகன்கள்) அவர் அந்தத் தொகையை
வழங்கினார். பின்னர் அவர்களிடம், 'நீங்கள்
ஈராக்கிலிருந்து பொருட்களை வாங்கி மதீனாவில் விற்கலாம்.
பின்னர், மூலதனத்தை அமீருல் முஃமினீனுக்குக் (கலீபாவுக்கு)
கொடுங்கள். இலாபத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.'
என்றார். ஈராக்கில் பொருட்களை வாங்கி மதீனாவில் விற்றதன்
மூலம், அவர்கள் இலாபம் ஈட்டினர்.
பின்னர், அவர்கள் உமர் (ரழி)
அவர்களுக்கு மூலனத்தை செலுத்தியபோது, மூலதனம் மற்றும் இலாபம்
ஆகிய இரு தொகையையும் ஒப்பகை;கும்படி அவர் கூறினார்.
அப்துல்லாஹ் அமைதியாக இருந்தார். ஆனால், இளைய மகன்
உபைதுல்லாஹ் ஆட்சேபனை தெரிவித்தார்: 'மூலதனம் குறைந்துவிட்டால் அல்லது
அழிக்கப்பட்டிருந்தால், நாங்கள் அதற்கு உத்தரவாதம்
அளித்திருப்போம். எனவே எங்களுக்கு இலாபம்
கிடைக்க வேண்டும்.' என்று கூறினார். ஒரு
சிறிய வாதத்திற்குப் பிறகு, ஒரு சட்டநிபுணரின்
ஆலோசனையின் பேரில், உமர் (ரழி)
அவர்கள் அதை ஒரு கூட்டு
ஒப்பந்தமாகக் கருத முடிவு செய்து,
அசல் பணத்தையும் இலாபத்தின் பாதியையும் ஏற்றுக்கொண்டார். உமர் (ரழி) அவர்களின்
இரு மகன்களும் இலாபத்தின் அடுத்த பாதியை எடுத்துக்
கொண்டனர் (மாலிக், 2002, ப. 419, அறிவிப்பு எண்
1396).