நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்
இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனை எந்நிலையில் உள்ளது?
இலங்கையில் போதைப் பொருள் பாவனையின் அளவு, சமீபத்தில் அதிகரித்திருப்பதாகத் தெரிகின்றது. போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் முக்கியமான குழுக்களுள் அல்காஈதா இயக்கம் பிரதான இடத்தை வகிக்கின்றது. அவர்களுக்குத் தேவையான பணத்தை இதன் மூலம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். கஸகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தப் போதைப் பொருள்களை பாரியளவில் விதைக்க முடியும். எனவே, இவை பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு வந்து,இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் ஒரு முறைமை உருவாகியிருன்றது என்பதுதான் தற்போது பார்க்கக் கிடைக்கும் தகவல்கள்.
இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டு வரும் பிரதான இடமாக பாகிஸ்தான் உள்ளது. இலங்கைக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள போதைப் பொருட்களில் 99 வீதமானவை பாகிஸ்தானிலிருந்தே கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களில், 99 வீதமானோர் பாகிஸ்தானியர்களே