Monday, December 26, 2016

தொல்பொருள் இடங்களை அழிக்குமாறு இஸ்லாம் கூறுகிறதா?

இந்தோனோசியாவிலுள்ள 09 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபதூர் விகாரை

அஷ்கர் தஸ்லீம்
புராதன தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிதைக்கும்படி இஸ்லாம் போதிப்பதாக, பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இஸ்லாம் இவ்வாறான கருத்துக்கைள ஒருபோதும் போதித்ததில்லை. இது இஸ்லாத்தின் மீது அபாண்டம் சுமத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
இந்த விவகாரம் குறித்து நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மறாhக, இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்த நாட்டின் சிங்களவர், பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான இடங்களல்ல. மாறாக, இந்த நாட்டின் அனைவருக்கும் சொந்தமானது என்பதையே தேரர் புரிய வைத்ததாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உண்மையில், தொல்பொருள் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை அழிக்கும்படி இஸ்லாம் ஒருபோதும் போதித்ததில்லை. மாறாக, இப்போது பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளாக உள்ள நாடுகளில், இஸ்லாத்துக்கு முன்னர் காணப்பட்ட மதங்களின் அடையாளங்களை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பெரும் அக்கறை எடுத்துள்ளனர்.

Monday, December 12, 2016

நபிகளாரின் போதனைகள் அகிலத்தாரையடைய முஸ்லிம்கள் தடையாக இருந்துவிடக்கூடாது!

அஷ்கர் தஸ்லீம்

அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த சிறப்புமிகு நாளில், நபிகளாரின் மணம் கமழும் வாழ்வு, அவரது போதனைகள் என்பன குறித்து நாம் ஒரு கனம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
இந்த அகிலத்தாருக்கு வழிகாட்டுவதற்காக, இறைவன் காலத்துக்கு காலம் நபிமார்களையும் தூதுவர்களையும் இந்த உலகுக்கு அனுப்பினான். அந்தத் தொடரில் இறுதியாக வந்த நபியும் தூதருமே பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு இந்த அகிலத்தாருக்கு முன்னுதாரணமானதாகும். ஒரு மனிதனின் வாழ்வில் அவன் சந்திக்கின்ற அனைத்து கட்டங்களுக்குமான அழகிய முன்னுதாரணங்களையும் வழிகாட்டல்களையும் நபிகளார் தனது வாழ்வு மூலம் தந்துள்ளார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் அவர் உதிர்த்த பொன்மொழிகள், அவரது நடத்தைகள், போதனைகளை எடுத்தொழுகுவதன் மூலம், இவ்வுலகத்தாருக்கு வெற்றி கிட்டும்.