Tuesday, August 30, 2016

ஐ.எஸ். - ஒரு நோய் அறிகுறி, ஆனால் அது நோயல்ல!

ஆங்கிலத்தில்: டானியா ஒகம்பொஸ்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
இஸ்லாமிய தேசம் என்று தம்மை பிரகடனம் செய்து கொண்டு .எஸ் இயக்கம், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 12 வீதமான நிலப் பகுதியை 2016 இன் ஆரம்ப மாதங்களில் இழந்துள்ளது. ஈராக்கிய நகரங்களான ரமாடி மற்றும் பலூஜா ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன. இந்தத் தகவல்கள் .எஸ்.எஸ்ஸின் நெருக்கடி கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், .எஸ் தம் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழக்க ஆரம்பித்தது. ஜூலையின் ஆரம்பப் பகுதியில் .நா உதவியில் லிபியாவில் இயங்கும் அரசு (.எஸ்)இன் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய வட ஆபிரிக்க நகரான சிர்டேயை கைப்பற்றியது. சில நாட்களின் பின்னர், அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் சிரிய எதிர்தரப்பு போராளிகள் சிரியாவின் மன்பிஜ் என்ற பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
.எஸ். யுத்த களத்தில் தோல்வியடைந்து வருவதை சுட்டிக்காட்டுவது போன்று, .எஸ். ஒரு பாரம்பரிய இராணுவம் என்ற தரத்திலிருந்து படிப்படியாக தோல்வியடைந்து வரும் வேகம் அதிகரிக்கும் என்பது புலனாகின்றது.
சிரியாவிலும் ஈராக்கிலும் இன,மத சூழலமைவு மிகவும் சிக்கலான நிலையில் உள்ளதால், .எஸ், இராணுவ ரீதியாக தோற்றகடிக்கப்பட்டதன் பின்னர், அங்கு ஆட்சியும் சமூக ஐக்கியமும் சவாலுக்கு உட்படும் என்பது புலனாகின்றது.

Thursday, August 18, 2016

துருக்கி - ரஷ்ய உறவின் மறுமலர்ச்சி

அஷ்கர் தஸ்லீம்
துருக்கிக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு மீண்டும் சீரடையத்தொடங்கியுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் கடந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டு விலாடிமிர் புடினை சந்தித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருபக்க உறவு சீரடையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரிய விவகாரம் குறித்த முரண்பாடுகளும் கடந்த வருடம் ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கி இராணுவம் சுட்டிவீழ்த்தியமையுமே துருக்கி ரஷ்யாஉறவு சிதைந்தமைக்கான பிரதான காரணங்களாகும்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் சிரிய பொதுமக்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை துருக்கி எதிர்த்துவருவதோடு, பஸார் அல் அஸாதின் இராணுவத்தினருக்கெதிராக போராடி வரும் போராளிகளுக்கு உதவிவருகின்றது. மறுபக்கம் ரஷ்யா பஷார் அஸாதின் நெருங்கிய கூட்டாளி என்பதால் அவருக்கு இராணுவ ரீதியாகவும் உதவி வருகின்றது.
இந்நிலையில் கடந்த வருட இறுதியில் ரஷ்ய போர் விமானமொன்று துருக்கி எல்லையினுள் வந்ததாக கூறி துருக்கி இராணுவம் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சம்பவமே இரு நாடுகளுக்குமிடையிலான உறவை முற்றாக துண்டிக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யர்கள் துருக்கியை தரிசிக்கக்கூடாதென்று ரஷ்யா அறிவுறுத்தியது.

Tuesday, August 9, 2016

இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும் - ருவன் விஜேவர்தன


தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

(தேசிய ஐக்கியத்துக்கான மன்றம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு வௌ;ளவத்தை எக்ஸலன்ஸி மண்டபத்தில் நடத்திய பாராட்டு உபசாரத்தின்போது அமைச்சர் ஆற்றிய உரை)

இந்த மதிப்புமிக்க நிகழ்வில் நான் பாராட்டப்படுவதன் மூலம் நான் உண்மையில் கௌரவிக்கப்படுகிறேன். இப் பெரும் நிகழ்வில் சில வார்த்தைகளை பேசுவதற்கு சந்தர்ப்பம் அளித்த தேசிய ஐக்கியத்துக்கான மன்றத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் அமைச்சர் .எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.எம். அமீன், நாம் அனைவரும் அறிந்திருப்பதுபோல் ஒரு முன்னணி ஊடகவியலாளர் மட்டுமல்ல, அவர் ஐக்கியம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை ஆதரித்துப் பேசும் ஒருவருமாவார். தேசிய ஐக்கியத்துக்கான மன்றத்தின் தலைவராக இருப்பதன் மூலம், எமது நாட்டு சமூகங்களுக்கு மத்தியில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம், எமது நாட்டுக்கு பெரும் சேவையை அவர் செய்துள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் .எச்.எம். பௌஸி அறிமுகம் தேவையற்ற ஒருவர். இலங்கையின் மிகவும் சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சரான அவர், அவரது பொது வாழ்வை, அவரது நாட்டுக்கும், அவரது சமூகத்துக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளார். 1959 இல் அவர் அரசியலுக்கு நுழைந்தது முதல், இலங்கை முஸ்லிம் சமூகத்தை உயர்த்தி விடுவதற்காக அயராது விடாமுயற்சியுடன் செயற்பட்டிருக்கிறார் அவர். வயதில் என்னை விட இரு மடங்காக உள்ளபோதும், எமது பாராளுமன்றத்தில் களங்கமில்லாத அரசியல்வாதியாக அவர் உள்ளார். அவரும் நானும் வித்தியாசமான, பல நேரங்களில் எதிர்த்தரப்பு நிற்கும் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். ஆனாலும், நான் எப்போதும் மெச்சுகின்ற, மிகவும் மதிக்கின்ற ஒரு அரசியல்வாதியே அவர் என்பதை நான் சொல்லியாக வேண்டும்.