ஆங்கிலத்தில்:
டானியா ஒகம்பொஸ்
தமிழில்:
அஷ்கர் தஸ்லீம்
இஸ்லாமிய
தேசம் என்று தம்மை பிரகடனம்
செய்து கொண்டு ஐ.எஸ்
இயக்கம், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த
12 வீதமான நிலப் பகுதியை 2016 இன்
ஆரம்ப மாதங்களில் இழந்துள்ளது. ஈராக்கிய நகரங்களான ரமாடி மற்றும் பலூஜா
ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன. இந்தத்
தகவல்கள் ஐ.எஸ்.எஸ்ஸின்
நெருக்கடி கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து
தெரிய வந்துள்ளது.
இவ்வருடம்
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்,
ஐ.எஸ் தம்
கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழக்க ஆரம்பித்தது. ஜூலையின்
ஆரம்பப் பகுதியில் ஐ.நா உதவியில்
லிபியாவில் இயங்கும் அரசு (ஐ.எஸ்)இன் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய வட
ஆபிரிக்க நகரான சிர்டேயை கைப்பற்றியது.
சில நாட்களின் பின்னர், அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் சிரிய எதிர்தரப்பு போராளிகள்
சிரியாவின் மன்பிஜ் என்ற பகுதியை
தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஐ.எஸ். யுத்த களத்தில்
தோல்வியடைந்து வருவதை சுட்டிக்காட்டுவது போன்று,
ஐ.எஸ். ஒரு
பாரம்பரிய இராணுவம் என்ற தரத்திலிருந்து படிப்படியாக
தோல்வியடைந்து வரும் வேகம் அதிகரிக்கும்
என்பது புலனாகின்றது.
சிரியாவிலும்
ஈராக்கிலும் இன,மத சூழலமைவு
மிகவும் சிக்கலான நிலையில் உள்ளதால், ஐ.எஸ், இராணுவ
ரீதியாக தோற்றகடிக்கப்பட்டதன் பின்னர், அங்கு ஆட்சியும் சமூக
ஐக்கியமும் சவாலுக்கு உட்படும் என்பது புலனாகின்றது.