Thursday, November 15, 2018

அனைவரதும் உயர் கல்விக் கனவை நனவாக்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


கொழும்பு நாவலயில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தலைமை வளாகம்.

இலங்கையில் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களில், இஸட் புள்ளிகளின் அடிப்படையில் வருடாந்தம் 30,000 மாணவர்களே தேசிய அரச பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
எனவே, உயர் தரப்ப பரீட்சையில் சித்தியடையும் பெரும் தொகை மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகம் சென்று படிக்க முடியவில்லையே என்று இவர்கள் கவலையடையத் தேவையில்லை! ஏனென்று கேட்கிறீர்களா? தொடர்ந்தும் கட்டுரையை வாசியுங்கள்.