லசந்த ருகுணகே
ஷரியா பல்கலைக்கழகம் என்று பிரபலமாக அறிமுகப்படுத்தப்படுகின்ற
'மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட்' நிறுவனம் குறித்து அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர், தெரிவித்து
வருகின்றனர். இவற்றுக்கு மத்தியில் அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்களும்,
அந்த உயர் கல்வி நிறுவனம்
தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் வெளியிடப்பட்டு
வருவதை அவதானிக்கலாம். ஆனாலும், இக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பெரும்பாலானோரிடம், அவற்றுக்கான ஆதாரங்கள் உண்டா என்பது சந்தேகத்துக்குரியதாகவே
இருக்கின்றது. ஏனனில், குற்றச்சாட்டு முன்வைப்போர்
அதற்குரிய ஆதாரங்களை முன்வைக்காமையே இச்சந்தேகத்துக்கான காரணமாகும்.
நாட்டை
குழப்புவதற்கு, தீ வைப்பதற்கு சத்தமிடாதபோதும்,
இந்த மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட் நிறுவனம் பற்றி
பாராளுமன்றத்தில் விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி மற்றும்
மனித வள அபிவிருத்தி பற்றிய
துறை கண்காணிப்பு மேலாண்மைக் குழு நியமித்த உயர்
கல்வி பற்றிய உப மேலாண்மைக்
குழுவுக்கு அப்பொறுப்பு பாரப்படுத்தப்பட்டுள்ளது.