சுதந்திரமாக இருந்த 20 மில்லியன் உய்குர்
முஸ்லிம்களின் மத, மொழி மற்றும் அரசியல்
சுதந்திரத்தைப் பறித்து அவர்களை எதிர்காலமற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்ற சீனா
மனித இனம் வெட்கித்துத் தலை குணிய வேண்டிய இன்னொரு இடமாகும். சர்வதேச அரசியலில் மேற்குலக
எதிர்ப்பு அணியில் இருந்த போதும் சீனாவின் இந்த உள்நாட்டுக் கொள்கை பெருத்த விசனத்தையே
ஏற்படுத்துகின்றது.
இந்தப் பின்னணியில்தான் 2012 மே 14ம் திகதி டோக்கியோவில்
நடைபெற்ற கிழக்குத் துருக்கிஸ்தானுக்கான சர்வதேச உய்குர் மாநாட்டு அமைப்பின் 4வது மாநாடு நோக்கப்படுகிறது.
அமைப்பின் தலைவி ரபீஆ கதீரின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஜப்பானின் பல அமைச்சர்களும்
பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.