Thursday, July 17, 2014

காலிக்கோட்டையின் சுவாரஷ்யங்கள்...

காலிக் கோட்டையின் வெளிப்புறத் தோற்றம்.                            காலிக் கோட்டையின் வெளிப்புறத் தோற்றம்.


அஷ்கர் தஸ்லீம்

'காலிக் கோட்டையில் வாழும் முஸ்லிம்களில் 99 வீதமானோர் தொழுகின்றனர். எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு முன்னமே, அவர்களுக்கு நாம் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். எனவே, எமது அத்திவாரம் உறுதியாக உள்ளது' என்கிறார் காலிக்கோட்டையைச் சேர்ந்த ஷாஃபி ஹாஜியார்.

காலிக் கோட்டை எனும்போது, அதன் சுற்றிலும் அமைந்திருக்கின்ற பாரிய கருங்கல் சுவர்களும், கோட்டையினுள்ளே அமைந்திருக்கின்ற பள்ளிவாயலும்தான் எம் நினைவுக்கு வருகின்றன. தென் மாகாணத்துக்கு சுற்றுலா செல்வோர், தரிசிப்பதற்கு மறந்தேனும் மறக்காத ஓர் இடமாகவே இது உள்ளது. காலிக் கோட்டை குறித்தும் அதில் வாழும் முஸ்லிம்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக நானும் காலிக் கோட்டைக்குச் சென்றேன்.

இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் 1588 இல் காலிக் கோட்டையை நிர்மாணித்தனர். பின்னர், 17 ஆம் நூற்றாண்டில், இலங்கையை ஆக்கிரமித்த ஒல்லாந்தர் அதனைப் புணர்நிர்மாணம் செய்தனர். 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையினுள், பல புராதன வரலாற்றுச் சின்னங்கள் இருக்கின்றன.

Saturday, July 12, 2014

கிண்ணியா - மங்கோலியா - ஆபிரிக்கா


கடந்த மே மாதம் (2014) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கிண்ணியாவுக்கு சென்றிருந்தேன். கிண்ணியா முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசம். அங்கிருந்தபோது நான் கிண்ணியா மக்கள் குறித்து முகநூலில் இட்ட ஒரு பதிவையும், அதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களில் தெரிந்தெடுத்த சிலவற்றையும் வலைத்தளத்திலும் பதிகிறேன். இங்கு பதிவேற்றியுள்ள படங்கள் மங்கோலிய மலாய, ஆபிரிக்க முகசாயலைக் காட்டுவதற்கான படங்களேயன்றி, கிண்ணியாவைச் சேர்ந்தவர்களுடையதல்ல.


தற்போது நான் கிண்ணியாவில் உள்ளேன். இதற்கு முதல் 5, 6 தடவைகள் கிண்ணியாவுக்கு வந்தும் உள்ளேன்.


நாம் தரிசிக்கும் ஊர்களின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் மற்றும் அந்த ஊர் பற்றிய இன்னோரன்ன விடயங்களையும் கேட்டறிந்து கொள்வது சுவாரஷ்யமானது.


நான் கிண்ணியாவுக்கு வரும்போதெல்லாம், இங்குள்ளவர்களின் முக சாயல்களை அதிக ஆர்வத்துடன் அவதானிப்பேன்

சிறிய கண்களையுடைய, சிறியதாக வளர்ந்த தாடியுடைய மஞ்சள் நிற மங்கோலிய சாயலுடைய முகங்களை இங்கு அதிகம் காண்கிறேன்.

அத்தோடு, தடித்த உதடுகளையுடைய, சுருட்டை முடிகொண்ட ஆபிரிக்க சாயலையுடைய முகங்களையும் இங்கு காண்கிறேன்.

Friday, July 11, 2014

அல்பேனியாவிலும் கொஸோவாவிலும் இனி ஒரே கல்வித் திட்டம்!

லின்டிடா நிகொல்லா

ஐரோப்பாவின் இரு முஸ்லிம் நாடுகளான அல்பேனியாவும் கொஸோவாவும் உத்தியோகபூர்வமாக ஒரே கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான உடன்டிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இனி, அல்பேனியாவிலும் கொஸோவாவிலுமுள்ள பாடசாலைகள் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டியங்கும்.

இரு நாடுகளினதும் முன் பல்கலைக்கழக கல்வி குறித்த உடன்படிக்கையில் அல்பேனிய கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லின்டிடா நிகொல்லாவும் கொஸோவா கல்வி அமைச்சர் ராமி புஜாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

2023 இல் உலகில் சிறந்த 10 நாடுகளுக்குள் துருக்கி இருக்க வேண்டும் என்பதுவே துருக்கியின் திட்டம்


நேர்காணல்ஸாரா அலி
தமிழில்அஷ்கர் தஸ்லீம்


ரஜப் தைய்யிப் அர்தூகான்
அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான முஹம்மத் ஸாஹித் குல் துருக்கியைச் சேர்ந்தவர். அல்முஜ்தமஃ சஞ்சிகை இவருடன் நடத்திய நேர்காணலில், துருக்கி பிரதமர் Hதூகானின் தேர்தல் திட்டமிடல்கள், அரபுலக விவகாரங்கள் தொடர்பாக அவரது நிலைப்பாடுகள், அயல் நாடுகளோடும் உலக நாடுகளோடும் எதுவித பிரச்சினைகளையூம் கொண்டிராத அவரது 'பூச்சிய பிரச்சினை" கொள்கை ஆகியன குறித்து கலந்துரையாடப்படுள்ளது. நண்பர்களோடு இந்த நேர்காணலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்தூகான் பெற்ற மாபெரும் வெற்றி, அவரது ஜனாபிமானம் அதிகரித்திருக்கின்றது என்பதற்கான சான்றா?


கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், தமக்கு சமூக சொகுசையூம், பொருளாதார அபிவிருத்தியையும், அரசியல் பாதுகாப்பையும், வெற்றியையும் பெற்றுத் தந்த தலைமையுடன் தாம் இருப்பதை மக்கள் நிரூபித்திருக்கின்றனர்.

47 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமையானது, துருக்கிய மக்களின் நம்பிக்கையை ரஜப் தையிப் அர்தூகான் பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாகும். அத்தோடு, மக்கள் எதிர்க்கட்சிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரமுமாகும்.