Wednesday, June 22, 2016

வலுக்கும் ட்ரம்ப் எதிர்ப்பு


ஆங்கிலத்தில்: நோவா சபோ
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்அமெரிக்க
(நவமணி 22.06.2016)

தேர்தலில் டொனல்ட் ட்ரம்பும், ஹிலரி கிளின்டனும் போட்டியிடும் நிலை உத்தியோகபூர்வமற்ற முறையில் உறுதியாகியுள்ளபோதும், தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று இதுவரையும் மிகச் சரியாக அனுமானிக்க முடியாத நிலையே தொடர்கிறது. ஹிலரி கிளின்டன் மிதவாத போக்கை பின்பற்றுகையில், டொனல்ட் ட்ரம்ப் மிகவும் கடும்போக்கை வெளிப்படுத்தி வருகிறார்.தான் ஆட்சிக்கு வரும்போது, அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் நுழைவதை தடை செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அத்தோடு, அமெரிக்காவில் குடியேறி வருவோருக்கு எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க சிறுபான்மையின மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதோடு, ட்ரம்பின் அறிவிப்புக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ட்ரம்பம் அதிகாரத்தக்கு வருவதாயின், சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்ள நேரிடும் அசௌகரியங்கள் குறித்து சிறுபான்மையினத்தவர் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதைத் தடுப்பதாகவும், அமெரிக்காவில் குடியேற வருவோரை எதிர்ப்பதாகவும் கூறும் டொனல்ட் ட்ரம்ப், அவரது மூதாதையரும்கூட அமெரிக்காவை ஆக்கிரமித்து குடியோர் என்பதை மறந்து போயுள்ளார் போலும்.

Thursday, June 16, 2016

போதையை போதனைகளால் மட்டும் அழிக்க முடியாது!

அஷ்கர் தஸ்லீம்



 ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் தளத்திலிருந்து 91.3 கிலோ அளவிலான கொக்கைன் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். இலங்கை வரலாற்றில் பெருமளவு போதைப் பொருள்கைப்பற்றப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவே.

ரூ. 2 பில்லியன் பெறுமதி வாய்ந்த இந்த கொக்கைன், பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 1 கிலோ பக்கட்களாக ஒழுங்குபடுத்தியே இப்போதைப் பொருள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் விசேட பிரிவினரால் கொடுக்கப்பட்ட துப்பின் அடிப்படையிலேயே இப்போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் சிசிர விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

40 வருடங்களாக சீனி இறக்குமதியில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரியே இந்த கொக்கைன் போதைப் பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார். இந்த வியாபாரியும் இதற்கு ஒத்துழைத்த இன்னும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மத்திய தரைக் கடலில் நங்கூரமிடும் ரஷ்யா!

லியுக் கெஃபி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

சைக்ஸ் பீகோ உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு இந்த மே மாதத்தோடு ஒரு நூற்றாண்டு கழிந்துள்ளது. எனவே, முதலாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் பிரான்ஸினதும், பிரித்தானியாவினதும் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளாக மத்திய கிழக்கு துண்டாடப்பட்டது பெருமளவு நினைவுகூரப்பட்டது.

ஆனாலும், சைக்ஸ் பீகோ உடன்படிக்கைக்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட கொன்ஸ்தாந்துநோபிள் உடன்படிக்கை குறித்து அவ்வளவாக யாரும் அறிந்ததாக இல்லை. முதலாம் உலக ரஷ்யா, பிரான்ஸ், இந்த உடன்படிக்கையின்படி, துருக்கியின் ஜலசந்திகளையும், அப்போதைய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான கொன்ஸ்தாந்துநோபிளயும் ரஷ்யா பயன்படுத்துவதற்கு அனுமதித்திருந்தது.

ரஷ்யாவுக்கு மத்திய தரைக் கடலை எதுவிதத் தடையுமின்றி நெருங்குவது கஷ்டமாகவே இருந்தது. 1914 இல் மகா யுத்தத்தின் முதல் வருடத்தில் ரஷ்யாவின் ஏற்றுமதிப் பொருட்களில் 50 வீதமானவையும், அதன் விவசாய ஏற்றுமதிகளில் 90 வீதமானவையும் துருக்கி ஜலசந்திகள் ஊடாகவே கொண்டு செல்லப்பட்டன.

1917 இல் ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சி, ரஷ்யாவை யுத்தத்திலிருந்து வெளியேற்றி விட்டிருந்தது. அதாவது கொன்ஸ்தாந்துநோபிள் உடன்படிக்கை ஒருபோதும் உணரப்படுவதாக இருக்கவில்லை.

ஐரோப்பிய இஸ்லாமோபோபியா குறித்து…


-அஷ்கர் தஸ்லீம்-

(இன்திஸார் கெரிகி என்ற தூனிஸிய பூர்வீக பிரித்தானிய பெண் எழுத்தாளரின் கட்டுரையைத் தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இன்திஸார் கெரிகி, ஒப்பீட்டு அரசியல் உளவியல் துறையில் தனது கலாநிதி ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.)

கடந்த நூற்றாண்டின் மத்திமப் பகுதியில், வட ஆபிரிக்க அரபு நாடுகளிலிருந்தும், தெற்காசிய நாடுகளிலிருந்தும் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள், ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழத் தொடங்கினர். கல்வி மற்றும் தொழில் நோக்காக ஐரோப்பா சென்ற இவர்கள் அங்கேயே குடியேறி தற்போது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர்கூட தோன்றிவிட்டனர்.

பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பிரான்ஸில் மொரோக்கோ, அல்ஜீரியா, தூனிஸியா போன்ற வட ஆபிரிக்க அரபு நாடுகளைச் சோந்த அரபு மற்றும் அமாஸிக் இன முஸ்லிம்கள் செறிவாக உள்ளனர்.

ஜேர்மனியில் துருக்கி இன முஸ்லிம் மிக செறிவாக வாழ்கின்றனர். அதுபோக, இங்கிலாந்து உள்ளிட்ட இன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் தெற்காசிய -குறிப்பாக பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் இந்திய- முஸ்லிம்கள் அதிகளவு வாழ்கின்றனர்.

இரண்டாம். மூன்றாம் தலைமுறைகளாக தற்போது ஐரோப்பாவில் வாழும் இம்முஸ்லிம்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளாலும், வன்முறைகளாலும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.

நீதிக்காகக் குரல் கொடுத்த துணிச்சல் வீரன் முஹம்மத் அலி!


-அஷ்கர் தஸ்லீம்-

உலக குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலியின் மரணம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. ஒரு குத்துச் சண்டை வீரர் என்பதற்கப்பால், முஹம்மத் அலியின் அரசியல் நிலைப்பாடுகளும், சமூகப் போராட்டமுமே அவருக்கு உலகெங்கும் பெருமளவு அபிமானிகளையும் ஆதரவாளர்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. 

அமெரிக்க பிரஜையான முஹம்மத் அலி, ஆபிரிக்க பூர்வீகத்தவர். அமெரிக்காவில் நிலவி வந்த, ஆபிரிக்க பூர்வீகத்தவர்களுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுய அபிமானத்துடன் எழுந்து நின்று, உலகளவில் பேசப்படும் ஒரு ஆளுமையாக அவர் தன்னை சமைத்துக் கொண்டவர்.

1942 ஜனவரி 17 ஆம் திகதி அமெரிக்காவில் பிறந்த முஹம்மத் அலியின் இயற் பெயர் கெஸியஸ் க்ளே என்பதாகும். கிறிஸ்தவ மதத்தில் பிறந்த அவர், பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவி, தன் பெயரையும் முஹம்மத் அலி என்று மாற்றிக் கொண்டார். அவரது இயற்பெயரில் உள்ள க்ளே என்ற சொல் கருப்பு அல்லது களி என்று பொருள்படுவதால், அவர் அதனைப் பயன்படுத்துவதை வெறுத்தார்.

முஹம்மத் அலியின் தந்தை ஒரு பெய்ன்டர் ஆக பணி புரிந்து வந்ததோடு, தாயார் பணக்கார வீடுகளில் சமையல் வேலைகள் செய்து வந்தார். முஹம்மத் அலியின் வாழ்வின் ஆரம்பக் கூறுகளின்போது, அவர் வாழ்ந்த பகுதியில் ஆபிரிக்க கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பெருமளவு காணப்பட்டது. இதனால் முஹம்மத் அலியும் பாதிக்கப்பட்டிருந்தார். 

இஸ்ரேல் தவிர்ந்த அனைவரும் எமது நண்பர்களே! - பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்துல்லாஹ் ஸைத்


(இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்துல்லாஹ் ஸைத் அவர்களுடனான நேர்காணல்)

நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்
(Navamani 10.06.2016)

கேள்வி:- இலங்கை முஸ்லிம்கள் பலஸ்தீன போராட்டம் குறித்து அறிந்திருக்கின்றபோதும், ஏனைய சமூகத்தினர் அவ்வளவாக அறிந்தில்லை. எனவே, பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போராட்டம் குறித்த சுருக்கமான அறிமுகமொன்றைத் தாருங்கள்.

பதில்:- அனைத்து இலங்கையரும் பலஸ்தீன் விவகாரம் குறித்து புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக இனம் மதம் என்பவற்றுக்கு அப்பால் நம்மோடு தொடர்பு வைத்திருக்கின்றவர்கள், பலஸ்தீனப் போராட்டம் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். இலங்கையில் இனம், மதம், குழுக்கள் என்ற பிரிவுகளுக்கு அப்பால் அனைத்து இலங்கையரும் எம்மோடு நல்லுறவு வைத்திருக்கிறார்கள். இதற்கு அல்லாஹ்வுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அனைத்துத் தரப்புக்களும் எம்மோடு நல்லுறவு கொண்டுள்ளனர். நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், நிகழ்வுகளிலும் இதனை அவதானித்திருக்கிறேன்.

சர்வதேச சமூகத்தின் உதவியோடு பலஸ்தீன் என்ற நாடு உருவாகியுள்ளது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளன. தற்போது ஐ.நா. சபையிலும் பலஸ்தீன கொடி ஏற்றப்படுகின்றது. உலகின் ஏனைய பகுதிகளைப் போன்றே பலஸ்தீனும் ஒரு பகுதிதான். உஸ்மானிய சாம்ராஜ்யாத்தின் ஒரு பகுதியாகவும், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவும் அது இருந்தது. வரலாறு இதற்கு சாட்சியமாக உள்ளது.

சைக்ஸ் பீகோ உடன்படிக்கை அரபுலகத்தைத் துண்டாடி, பிரான்ஸையும் பிரித்தானியாவையும் இப்பிராந்தியத்தின் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது. முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகா யுத்த காலப் பகுதியில் தேசியவாதம் வளர்ந்தது. நவீன உலக ஒழுங்கும் அக்காலப் பகுதியில்தான் உருவாகியது. எனவே, முஸ்லிம், கிறிஸ்தவ, சிறியளவு யூதாகளைக் கொண்ட பலஸ்தீனிலும் இதன் செல்வாக்கு இருந்தது.

Wednesday, June 15, 2016

மத பன்மைத்துவத்துக்கு ஊக்கமளித்த நபிகளாரும் முரணாக செயற்படும் ஐ.எஸ்ஸும்!



-க்ரெய்க் கொன்ஸிடைன்-
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

இந்த சம்பவத்தை மனத்திரை முன் கொண்டு வாருங்கள் ஒரு முஸ்லிம் தலைவர், அயல்நாட்டு கிறிஸ்தவர்களை தன்னாட்டுக்கு வருமாறு அழைக்கிறார். அந்த கிறிஸ்தவர்களும் அவ்வழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கின்றனர். கிறிஸ்தவர்களை வரவேற்பதற்காக, முஸ்லிம் தலைவரும் தன்னாட்டு மக்களை தயார்படுத்தலானார். பின்னர் இரு குழுவினரும் சந்தித்துக் கொண்டனர்.

இந்த இரு சமூகத்தினரும் சந்திக்கும் முதற் சந்தர்ப்பம் இதுவே. அரச விவகாரங்கள். அரசியல், மதம் ஆகிய தலைப்புக்களிலேயே இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ்விரு சமூகத்தினரும் பல விடயங்களில் ஒன்றுபட்டபோதும், மதம் குறித்த விடயங்களில் ஒன்றுபடவில்லை. இவர்களின் இச்சந்திப்பு குறித்து ஒற்றை வார்த்தையில் சொல்வதாயின், ‘இரு பக்க மரியாதையுடன் நடைபெற்ற சந்திப்பு’ என்று சொல்லலாம்.

பேச்சவார்த்தையின் இறுதியில், தற்போது நாம் வணக்க வழிபாட்டில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கிறிஸ்தவர்கள் முஸ்லிம் தலைவரிடம் கூறினர். கிறிஸ்தவாகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான கிறிஸ்தவ தேவாலயமொன்று அங்கே இருக்கவில்லை.

எனவே, கிறிஸ்தவர்கள் வெறும் தரையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ‘நீங்கள் ஓர் உண்மையான இறைவனை வணங்குகிறீர்கள். எனவே, தயவு செய்து எனது பள்ளிவாசலினுள் வந்து உங்கள் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். நாம் மனித சகோதரர்கள்.’ என முஸ்லிம் தலைவர் கூறினார். முஸ்லிம்களின் இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள கிறிஸ்தவர்களும் உடன்பட்டனர். சமாதானம் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இவ்விரு மத சமூகங்களுக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்கப்பட்டதை இங்கு அவதானிக்கலாம்.