ஆங்கிலத்தில்: நோவா சபோ
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்அமெரிக்க
(நவமணி 22.06.2016)
தேர்தலில் டொனல்ட் ட்ரம்பும்,
ஹிலரி கிளின்டனும் போட்டியிடும் நிலை உத்தியோகபூர்வமற்ற முறையில் உறுதியாகியுள்ளபோதும்,
தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று இதுவரையும் மிகச் சரியாக அனுமானிக்க முடியாத நிலையே தொடர்கிறது. ஹிலரி கிளின்டன் மிதவாத போக்கை பின்பற்றுகையில், டொனல்ட் ட்ரம்ப் மிகவும் கடும்போக்கை வெளிப்படுத்தி வருகிறார்.தான் ஆட்சிக்கு வரும்போது,
அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் நுழைவதை தடை செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அத்தோடு, அமெரிக்காவில் குடியேறி வருவோருக்கு எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க சிறுபான்மையின மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதோடு,
ட்ரம்பின் அறிவிப்புக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
ட்ரம்பம் அதிகாரத்தக்கு வருவதாயின்,
சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்ள நேரிடும் அசௌகரியங்கள் குறித்து சிறுபான்மையினத்தவர் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதைத் தடுப்பதாகவும்,
அமெரிக்காவில் குடியேற வருவோரை எதிர்ப்பதாகவும் கூறும் டொனல்ட் ட்ரம்ப், அவரது மூதாதையரும்கூட அமெரிக்காவை ஆக்கிரமித்து குடியோர் என்பதை மறந்து போயுள்ளார் போலும்.