Monday, September 16, 2019

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் வரலாறு - தொடர் 02




பேராசிரியர் அப்துல் அஸீம்
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

இஸ்லாத்தில் நிதியளிப்பிற்கான முறையான ஏற்பாடு
இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில், முறையான நிதியளிப்பின் அடித்தளத்தை குறிக்கும் முதல் நிறுவனமாக பைதுல் மால் (நிதி இல்லம்) அல்லது பொது திறைசேரி அமைந்திருந்தது. அடிப்படையில் இது ஒரு அரச நிதி நிறுவனமாகும். ஆனால், இது தனிநபர்களுக்கும் கடன்கள் அல்லது முதலீட்டு மூலதனத்தை வழங்கியது. இது கலீபாவிற்கும் பொதுமக்களுக்குமான ஒரு அரச வங்கியாக இயங்கியது. உதாரணமாக, இரண்டாவது கலீபாவான உமர் (ரழி) அவர்கள், வணிக நோக்கத்திற்காக 4000 (திர்ஹம்) தொகையை ஹிந்த் என்பவருக்குக்கு வழங்கினார் (அத்தபரி, 1407 ஹி., தொகுதி 2, பக். 576-77). 
பொது நிதியிலிருந்து வர்த்தக நோக்கத்திற்காக கடன் வழங்கப்பட்டதற்கு மற்றொரு உதாரணமும் உள்ளது. பஸராவின் ஆளுநரான அபூ மூசா அல்-அஷ்அரி (கி.பி. 662 மற்றும் 672 க்கு இடையில்), பைதுல்மாலுக்கு வழங்குவதற்காக மதீனாவில் உள்ள மத்திய திறைசேரிக்கு சிறிது பணம் அனுப்ப வேண்டியிருந்தது. இஸ்லாமிய கிலாபத்தின் தலைநகரான மதீனாவுக்குப் பயணிக்க விரும்பிய அப்துல்லாஹ் மற்றும் உபைதுல்லாவுக்கு (உமர் இப்னுல் கத்தாபின் இரண்டு மகன்கள்) அவர் அந்தத் தொகையை வழங்கினார். பின்னர் அவர்களிடம், 'நீங்கள் ஈராக்கிலிருந்து பொருட்களை வாங்கி மதீனாவில் விற்கலாம். பின்னர், மூலதனத்தை அமீருல் முஃமினீனுக்குக் (கலீபாவுக்கு) கொடுங்கள். இலாபத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.' என்றார். ஈராக்கில் பொருட்களை வாங்கி மதீனாவில் விற்றதன் மூலம், அவர்கள் இலாபம் ஈட்டினர். பின்னர், அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு மூலனத்தை செலுத்தியபோது, மூலதனம் மற்றும் இலாபம் ஆகிய இரு தொகையையும் ஒப்பகை;கும்படி அவர் கூறினார். அப்துல்லாஹ் அமைதியாக இருந்தார். ஆனால், இளைய மகன் உபைதுல்லாஹ் ஆட்சேபனை தெரிவித்தார்: 'மூலதனம் குறைந்துவிட்டால் அல்லது அழிக்கப்பட்டிருந்தால், நாங்கள் அதற்கு உத்தரவாதம் அளித்திருப்போம். எனவே எங்களுக்கு இலாபம் கிடைக்க வேண்டும்.' என்று கூறினார். ஒரு சிறிய வாதத்திற்குப் பிறகு, ஒரு சட்டநிபுணரின் ஆலோசனையின் பேரில், உமர் (ரழி) அவர்கள் அதை ஒரு கூட்டு ஒப்பந்தமாகக் கருத முடிவு செய்து, அசல் பணத்தையும் இலாபத்தின் பாதியையும் ஏற்றுக்கொண்டார். உமர் (ரழி) அவர்களின் இரு மகன்களும் இலாபத்தின் அடுத்த பாதியை எடுத்துக் கொண்டனர் (மாலிக், 2002, . 419, அறிவிப்பு எண் 1396).

Monday, September 9, 2019

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் வரலாறு - தொடர் 01



பேராசிரியர் அப்துல் அஸீம்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்


இந்த ஆய்வுக் கட்டுரையானது, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் முதல் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் இஸ்லாமிய வங்கிகள் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட காலம் வரையில், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவிருக்கின்றது. அத்தோடு, பெரும்பாலும் ஆய்வு செய்யப்படாத ஒரு பகுதியான, இஸ்லாமிய வரலாற்றின் இறுதிப் பகுதிகளில் காணப்பட்ட வங்கியியல் நடவடிக்கைகள் மீதும் அவதானம் செலுத்தவுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையானது, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் காணப்பட்டதையும், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் நவீன இஸ்லாமிய வங்கிகளின் அபிவிருத்திக்கு முன்னைய நிலையையும் பதிவு செய்கின்றது. இஸ்லாமிய வங்கியியலானது பொருளாதார வாழ்க்கையின் நடவடிக்கைகளை இஸ்லாமிய வழிமுறையின்படி செயற்வதற்கான ஒரு முயற்சியாகக் காணப்பட்டது. இது முதலில் கிராமிய மற்றும் விவசாய பொருளாதாரங்களில் உருவானது. மாறாக, வழமையாக சொல்லப்படுவது போன்று பெட்ரோடொலார் அல்லது மத்திய கிழக்கில் எண்ணெய் வள எழுச்சிக்குப் பின்னர் தான் இஸ்லாமிய வங்கியியல் உருவானது என்பது தவறான கருத்தாகும் என்று இந்த ஆய்வு முடிவுரை வழங்குகின்றது.


அறிமுகம்

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் தான், இஸ்லாமிய பொருளாதாரத்தின் மிகவும் கட்புலனாகும் நடைமுறை ரீதியான அடைவாகும். எவ்வாறாயினும், இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதலான இஸ்லாமிய பொருளாதாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்கான முயற்சிகள் அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தத் துறை குறித்த நூல்களில், பொதுவாக, 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பாதிக்கு முன்னைய வங்கியியல் மற்றும் நிதியியல் குறித்த தகவல்களை நாம் காண முடியாது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காணப்பட்ட வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் குறித்தும், நவீன இஸ்லாமிய வங்கிகளின் வருகைக்கு முன்னைய நிலை குறித்தும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அறிந்ததாக இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பவும், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலானது 20 ஆம் நூற்றாண்டின் பிரத்தியேகமான தயாரிப்பு என்ற தவறான புரிதலை நீக்கவும், இந்த ஆய்வுக் கட்டுரை முயல்கின்றது. அத்தோடு, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் முதல் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் இஸ்லாமிய வங்கிகள் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட காலம் வரையில், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்கின்றது. மேலும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் காணப்பட்ட அரை-வங்கியியல் நிறுவனங்கள் குறித்த ஆரம்பகால பதிவுகளையும் இந்த ஆய்வு வழங்குகின்றது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வங்கிகளுக்கான ஒரு மாற்றீடாக இஸ்லாமிய வங்கிகள் வருவதற்கு முன்னர் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை இவ்வாய்வுக் கட்டுரை விளக்குகின்றது. இறுதியாக, இஸ்லாமிய வங்கியியலானது அடையாள உருவாக்கம் அல்லது 'அகில இஸ்லாமிய'த்தின் ஒரு தயாரிப்பு; அது மத்திய கிழக்கின் எண்ணெய் வள நாடுகளால் ஊக்குவிக்கப்பட்டது என்ற கருத்தை மறுக்கின்றது.

Friday, July 19, 2019

ஜம்இய்யதுல் உலமா உட்பட அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய தேசிய பொறிமுறை அவசியம் - அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்


ஜம்இய்யதுல் உலமா உட்பட இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிவில் சமூக நிறுவனங்கள், தரீக்காக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதும், பொது இலக்குகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய மட்டத்தில் செயற்படுவதற்குமான ஒரு சிறந்த பொறிமுறை அடையாளம் காணப்பட்டு அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்பது எனது மிகப்பெரும் எதிர்பார்ப்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் தெரிவித்தார். அவர் வழங்கிய முழுமையான நேர்காணலை கீழே வாசிக்கலாம்.
நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்



உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்துஇலங்கை முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளது?
எவரும் எதிர்பாராத விதத்தில் நடந்த இந்த துன்பியல் நிகழ்வுநாட்டை உலுக்கியது போலஇலங்கை முஸ்லிம்களில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். இப்பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்துஇலங்கை முஸ்லிம் சமூகம் ஒருமித்த குரலில் அதனை முற்றுமுழுதாக ஆட்சேபித்ததோடுமனிதாபிமான கண்ணோட்டத்திலும் பண்பாட்டுக் கண்ணோட்டத்திலும்  இஸ்லாமியக் கண்ணோட்டத்திலும் இந்த ஈனச் செயலை கண்டித்தது.

Thursday, June 27, 2019

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கெம்பஸ்: இதுவரை கிடைத்த தகவல்கள்



லசந்த ருகுணகே


ஷரியா பல்கலைக்கழகம் என்று பிரபலமாக அறிமுகப்படுத்தப்படுகின்ற 'மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட்' நிறுவனம் குறித்து அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர், தெரிவித்து வருகின்றனர். இவற்றுக்கு மத்தியில் அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்களும், அந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கலாம். ஆனாலும், இக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பெரும்பாலானோரிடம், அவற்றுக்கான ஆதாரங்கள் உண்டா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது. ஏனனில், குற்றச்சாட்டு முன்வைப்போர் அதற்குரிய ஆதாரங்களை முன்வைக்காமையே இச்சந்தேகத்துக்கான காரணமாகும்.

நாட்டை குழப்புவதற்கு, தீ வைப்பதற்கு சத்தமிடாதபோதும், இந்த மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட் நிறுவனம் பற்றி பாராளுமன்றத்தில் விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறை கண்காணிப்பு மேலாண்மைக் குழு நியமித்த உயர் கல்வி பற்றிய உப மேலாண்மைக் குழுவுக்கு அப்பொறுப்பு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

Monday, February 18, 2019

பால்மா குறித்து கலக்கம் வேண்டாம் -Halal Accreditation Council-



நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் பாம் எண்ணெய், லக்டோஸ் ஆகியவற்றின் கலவை என்றும் அவற்றில் பன்றிக் கொழுப்பும் கலக்கப்பட்டள்ளது என்றும் தனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பிரதியமைச்சர் புத்திக பதிரண சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் இது குறித்து அவர் இப்போது பேசி வருகிறார்.

இவ்வாறான முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில் இது குறித்த விளக்கத்தைப் பெறுவதற்கு நாம் இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையை தொடர்பு கொண்டோம். இப்பேரவையின் உள்ளக ஷரீஆ பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் இர்ஃபான் முபீன் விளக்கங்களை வழங்கினார்.