Saturday, September 21, 2013

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக ஒருமைப்பாட்டுக்கான பேரணி


சிறுபான்மைகளுக்கு எதிரான ஒரு இனவாதப் போக்கு இலங்கையில் தலைதூக்கி வருவதை நாம் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் நாட்டில் மீண்டுமொரு இனப் பிரச்சினையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிரான ஒருமைப்பாட்டுக்கான பேரணி (Rally for Unity) என்ற பெயரில் கொழும்பிலும் மாதரையிலும் இரு பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த பேரணிகளை இனம் மதம் சாராது மூவினங்களையும் சேர்ந்த இளம் செயற்பாட்டாளர்கள் இணைந்து நடாத்தியுள்ளனர். ஒருமைப்பாட்டுக்கான பேரணிகளை (Rally for Unity)  ஏற்பாடு செய்த குழுவைச் சேர்ந்த பிரதிபா பெரோ, பிரபுதீபன், அப்துல் ஹாலிக் அஸீஸ் ஆகியோரை மீள்பார்வைக்காக சந்தித்தேன்.
நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

ஒருமைப்பாட்டுக்கான பேரணி (சுயடடல கழச ரnவைல) திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது! இது என்ன?

பிரதிபா பெரேரா:

பிரதிபா பெரேரா
நாம் அன்றாடம் சாப்பிடுகிறோம். அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். இதுபோன்றே கருத்தைச் சொல்வதற்கான சுதந்திரம், நண்பர்களுடன் பழகுதல், சமத்துவம் எனபனவும் எனது அன்றாடத் தேவைகள்தான். ஏனையோருக்குத் தொந்தரவு கொடுக்காது எனது விருப்பம்போல் நண்பர்களுடன் பழகுவதற்கும் எனது கருத்துக்களை வெளியிடுவதற்கும் யாரேனும் தடை விதித்தால் அது பிரச்சினையே.

சமீபத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் என்னைப் போன்றே எனது ஏனைய சகோதரர்களுக்கும் அவர்களது தனித்துவத்தைப் பேணி வாழ்வதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு சாதாரண பிரஜையாக வாழ்வதற்கும் தடையாய் அமைந்து வருகின்றன.

நான் சாப்பிடுவதை யாரேனும் தடுப்பதாயின் நான் அதற்கெதிராகப் பேசுவேன். எனது வீட்டை யாரேனும் பறித்துக் கொள்வதாயின் நான் அதற்கெதிராகப் பேசுவேன். இதுதான் ஒருமைப்பாட்டுக்கான பேரணியின் (Rally for Unity) பின்னணி.


Thursday, August 15, 2013

எதிர்க்கட்சி கொழும்பில் நடாத்திய சமகிபலவேகலய ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில், (14.08.2013) வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி நடத்திய 'சமகி பலவேக' ஆர்ப்பாட்டத்தின்போது நான் பிடித்த படங்கள்.















Monday, July 15, 2013

நாம் கற்பவை ஒரு நாளும் வீணாகப்போவதில்லை. நாம் வியாபாரம் செய்வதாக இருந்தால், நாம் கற்பவற்றைக் கொண்டு அதனை இன்னும் வளர்த்துக் கொள்ளலாம்: ஆபித் ருஷ்தி


ஆபித் ருஷ்தி பதுல்லையைச் சேர்ந்தவர். இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா விமானத்துக்கான தொழினுட்பத்தை கண்டுபிடித்த குழுவில் இவரும் ஒருவர். இது ஆபித்துடன் நான் மேற்கொண்ட நேர்காணல்.


ஆரம்பமாக உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்
நான் ஆபித் ருஷ்தி. எனது ஊர் பதுல்லை. நான் பதுல்லை மத்திய கல்லூரியில் சிங்கள மொழியில் கற்றேன். 2007 உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாவதாகவும் நாடளாவிய ரீதியில் 34 ஆவதாகவும் நான் சிந்தியடைந்தேன். இந்த வருடம் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் டெலிகொமினிகேஷன் பொறியியலாளராக பட்டம் பெற்று வெளியேறினேன்.

எனது தந்தை முஹம்மத் ஸாதுல்லாஹ். அவர் இலங்கை மின்சார சபையில் பொறியியலாளராகக் கடமையாற்றினார். அதிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது குடும்ப வியாபாரமொன்றை நடாத்தி வருகிறார். எனது தாய் இஸ்ஸதுல் வஸீமா ஒரு இல்லத்தரசி. எனது மூத்த சகோதரன் பிஷார் ஹாதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிவில் பொறியியலாளராக பட்டம் பெற்று வெளியேறினார். எனது இளைய சகோதரன் ஸாஜித் உஸாமா கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 ஆவது வருடத்தில் கற்கிறார்.

Monday, June 3, 2013

துருக்கியின் வெளியுறவுக் கொள்கை – ஒரு குறிப்பு


ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் பல காரணிகள் பங்கெடுக்கின்றன. சிந்தனைகள், கோட்பாடுகள், பெறுமானங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச கள நிலவரங்கள், சவால்கள், சந்தர்ப்பங்கள், பல சமநிலை, உள்நாட்டு பாதுகாப்பு, வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள், புவியரசியல் நிலைமைகள், பொருளாதாரம் என்பன இதில் முக்கியமானவை. இந்தப் பின்னணிகளில் நின்றுதான் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதில் ஓரிரண்டு காரணிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மதிப்பீடு செய்வது பொருத்தமில்லை.

Wednesday, December 26, 2012

எமக்காகப் பேசுகின்ற மாற்று மதத்தவர்களை உருவாக்க நாம் தவறியிருக்கிறோம்: என்.எம் அமீன்


('2012 ல் இடம்பெற்று வரும் நிகழ்வுகளின் பின்னணியில், இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' எனும் தலைப்பில், மீள்பார்வை ஊடக மையம் 12.12.2012 அன்று புதன்கிழமை கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நடத்தியது. இதில் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஜஹாஸ் என்.எம் அமீன் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை இங்கு தொகுத்து வழங்குகிறேன். இந்தத் தொகுப்பு நான் மீள்பார்கை;காக செய்தது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.)

தொகுப்பு: அஷ்கர் தஸ்லீம்

நெருக்கடியானதொரு கால கட்டத்தில் இதுபோன்றதொரு தலைப்பிலே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள மீள்பார்வை ஊடக மையத்துக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், இது இந்தக் காலத்தின் தேவையான ஒரு கலந்துரையாடலாக இருக்கின்றது. எங்களுடைய சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற சவால்கள் பற்றி நாங்கள் அறிந்து வைத்திருக்கின்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

Monday, December 10, 2012

யூஸுப் நபியின் கதை (சிறுவர்களுக்கானது) - பகுதி 01



சிறுவர்களுக்கான பல ஆக்கங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் இருக்கிறேன்... அல்ஹம்துலில்லாஹ்! கொஞ்சம் கொஞ்சம் பதிவேற்றலாம் என்று உத்தேசம்...

(அரபு மூலம்: அபுல் ஹஸன் அலி ஹஸன் அந்நத்வி




யூஸுஃப் ஒரு சின்னப் பையன்.
மிகவும் அழகானவன்.
விவேகமானவனும் கூட...
அவனுக்கு பதினொரு சகோதரர்கள் இருந்தனர்.
ஆனால், யூஸுஃபின் தந்தை யஃகூப் (அலை)
ஏனைய அனைத்து சகோதரர்களையும் விட,
யூஸுஃபைத்தான் அதிகம் நேசித்தார்.

Friday, December 7, 2012

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம்!



(கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் 'ஸம்ஸம்' சஞ்சிகைக்காக எழுதியது...)


அன்பின் தம்பி தங்கைகளே!

இன்றை உலகம் ஓர் அறிவியல் உலகம். நாளுக்கு நாள் புதிய புதிய கலைகள் உருவாக்கப்படுகின்றன. எத்தனையோ விதவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அறிந்து உலகத்தோடு சேர்ந்து வாழ வேண்டுமாயின் நாம் கட்டாயம் பல்வேறு விடயங்களையும் தேடிப் படிக்க வேண்டும். இதற்கான மிகச் சிறந்த சாதனமே வாசிப்புப் பழக்கமாகும். இதுவே மிகச் சிறந்த பொழுது போக்கு சாதனமும் ஆகும்.