(கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் 'ஸம்ஸம்' சஞ்சிகைக்காக எழுதியது...)
அன்பின் தம்பி தங்கைகளே!
இன்றை உலகம் ஓர் அறிவியல்
உலகம். நாளுக்கு நாள் புதிய புதிய கலைகள் உருவாக்கப்படுகின்றன. எத்தனையோ விதவிதமான
கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அறிந்து உலகத்தோடு சேர்ந்து வாழ
வேண்டுமாயின் நாம் கட்டாயம் பல்வேறு விடயங்களையும் தேடிப் படிக்க வேண்டும். இதற்கான
மிகச் சிறந்த சாதனமே வாசிப்புப் பழக்கமாகும். இதுவே மிகச் சிறந்த பொழுது போக்கு சாதனமும்
ஆகும்.
