Wednesday, February 12, 2014

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி பற்றிய அறிமுகக் குறிப்பு

 (அஷ்கர் தஸ்லீம்)

இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடிய காலம் முஸ்லிம் சமூகத்துக்குத் தலைமைத்துவத்தை வழங்கி வந்த இஸ்லாமிய கிலாபத் 1924 இல் இரத்துச் செய்யப்பட்டது. அப்போது துருக்கிய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழிலிருந்த நாடுகள் துண்டு துண்டாகின. துருக்கி ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றப்பட்டது. துருக்கியர்களை விட்டும் இஸ்லாத்தை தூரமாக்கி விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிலாபத்துக்குப் பிந்திய மதச்சார்பற்ற ஆட்சியாளர் முஸ்தபா கமாலினால் மேற்கொள்ளப்பட்டன.

துருக்கியர்களை மதச்சார்பற்றோராக்குவதற்கான இந்த முயற்சிகளை எதிர்த்து செயற்பட்டவர்களுள் இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி முதன்மையானவர். 1876 ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 'நூர்ஸ்' என்ற கிராமத்தில் ஸஈத் நூர்ஸி பிறந்தார். இவரது தந்தை மிர்ஸா ஒரு சூபியாவார். ஸஈத் நூர்ஸி தன் இள வயதிலேயே மார்க்க மற்றும் ஏனைய துறைகளில் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொண்டார்.

Friday, February 7, 2014

இலங்கையில் வாழும் ஆபிரிக்கர்களுடன் ஒரு நாள்

ஜோசப் எலியஸ்
(அஷ்கர் தஸ்லீம்)

எமது மூதாதையர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். மொசாம்பிக் நாட்டுக்கு வந்த போர்த்துக்கேயர் எமது மூதாதையரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர். எமது மூதாதையருக்கு போர்த்துக்கேய மொழியையும் கிறிஸ்தவ மதத்தையும் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர்> இலங்கையை கைப்பற்றியதும் எமது மூதாதையரை அவர்களது காவலர்களாக இங்கே கொண்டு வந்தார்கள் என்று தமது இனத்தின் ஆபிரிக்கப் பூர்வீக வரலாற்றை என்னோடு பகிர்ந்து கொள்கிறார் புத்தளத்தில் வசிக்கும் ஆபிரிக்க கஃபீர் இனத்தைச் சேர்ந்த ஜோசப் எலியஸ்.

நான் எப்போதும் போல் அன்றும் பிபிசி இணையதளத்தில் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தெடுத்தது. அந்த செய்தி இலங்கையில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க பூர்வீகத்தைக் கொண்ட கஃபீர் இன மக்கள் பற்றிப் பேசியது.

இலங்கையில் ஆபிரிக்கர்களா? அதுவும் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் இங்கு வாழ்கிறார்களா? எனக்கு இந்த செய்தி சற்று ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கையில் வாழும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்களை சந்திக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த செய்தி எனக்குத் தந்தது. எனவே> புத்தளத்தைச் சேர்ந்த நண்பன் ஆஸாத்துடன் அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன்.

Thursday, February 6, 2014

இலங்கையின் தேசிய கீதம் - சில வரலாற்றுக் குறிப்புக்கள்


ஆனந்த சமரகோன்
ஒரு நாட்டின் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையிலேயே தேசிய கீதங்கள் அமைகின்றன. தேசிய கீதம் என்பது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையின் தேசிய கீதம் பற்றித் தேடிப்பார்க்கையில், இலங்கையில் பல தேசிய கீதங்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி நிலவிய காலத்தில், பிரித்தானியாவுக்காகப் பாடப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது. 1745 இல் இலங்கை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது.

Friday, January 24, 2014

ரஷ்ய தூதரகத்துக்காக காணிகளை இழக்கப்போகும் முஸ்லிம்கள் - பள்ளிவாசலும் அகற்றப்படலாம்!




ரஷ்ய தூதரகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சி

(அஷ்கர் தஸ்லீம்)

 7 பௌத்தாலோக மாவத்தை அஷ்ரப் மாவத்தையிலுள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலையும் அதனைச் சூழ உள்ள வீடுகளையும் அகற்றுமாறு அரசாங்கம் விடுத்துள்ள பணிப்புரை பிரதேச வாசிகளை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அப்புறப்படுத்துமாறு வேண்டப்பட்டிருக்கும் மஸ்ஜதுன் நூர்




அஷ்ரப் மாவத்தைக்கு அருகாமையில் ரஷ்ய நாட்டின் தூதரகம் அமையவுள்ளது. எனவே, அதனை அண்மித்துள்ள பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலையும் அதனைச் சூழவுள்ளவர்களையும் அப்புறப்படுத்துமாறு ரஷ்ய தூதரகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Friday, December 20, 2013

பொன் தீவு கண்டல் காணி பிரச்சினை: வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர்கொள்ளும் இன்னுமொரு சவால்!

(அஷ்கர் தஸ்லீம்)

மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொன் தீவு கண்டல் மற்றும் பூவாரசம் குளம் பகுதி தமிழ் கிறிஸ்தவ - முஸ்லிம்களுக்கு இடையிலான காணி சம்பந்தப்பட்ட முறுகல் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பலத்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளால் விரட்டப்பட்டு புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு, பூவாரசம் குளம் மற்றும் பொன் தீவு கண்டல் பகுதிகளுக்கு இடைப்படட பிரதேசத்தில், அரசாங்கத்தால் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகள் தமது பூர்வீக பிரதேசம் என்றும் அவையும் தமக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ் கிறிஸ்தவ தரப்பு கூறி வருகின்றது.

Thursday, December 12, 2013

பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆய்வு மாநாடு

(அஷ்கர் தஸ்லீம்)

பேராதனை பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறையின் ஏற்பாட்டில் 'பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம்' என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 27 ஆம் திகதி, தேசிய ஆய்வு மாநாடொன்று நடாத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்கு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு நிதியுதவி அளித்திருந்தது.

முழுநாள் மாநாடாக நடைபெற்ற இதில் விஷேட பேச்சாளராக கலாநிதி சுக்ரி, விஷேட அதிதியாக பேராசிரியர் தீரானந்த தேரர், சிறப்பு அதிதியாக நீதிபதி சீ.ஜீ வீரமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறை 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் இத்துறையில் பட்டப்பின்படிப்புக் கற்கைகளைக் கொண்டிருக்கின்ற ஒரே பல்கலைக்கழகம் இதுதான்.

Friday, November 8, 2013

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு பற்றிய சுருக்கமான தொகுப்பு

 (அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்)



பொதுநலவாய நாடுகள் என்றால் என்ன?

பொதுநலவாய நாடுகள் (Commonwealth Nations) என்பது பிரித்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழிலிருந்து பின்னர் சுதந்திரமடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். இது உலகில் பழைமை வாய்ந்த அரசியல் கூட்டமைப்புக்களில் ஒன்றுமாகும். இந்த நாடுகள் இணைந்து 1949 ஆம் ஆண்டு பொதுநலவாயத்தை ஸ்தாபித்தன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது இதில் 8 நாடுகளே அங்கத்துவத் தைப் பெற்றிருந்தன.


பொதுநலவாயத்தில் தற்போது 19 ஆபிரிக்க நாடுகளும், 11 தென் பசுபிக் நாடுகளும், 10 கரீபியன் நாடுகளும், 8 ஆசிய நாடுகளும், 3 அமெரிக்க நாடுகளும், 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கத்துவம் பெற்றுள்ளன. பிரித்தானிய சாம்ராஜ்யத்துடன் வரலாற்று ரீதியான உறவுகள் இல்லாதபோதும், ருவாண்டா, மொஸாம்பிக் ஆகிய நாடுகளும் அண்மையில் பொதுநலவாயத்தில் இணைந்து கொண்டுள்ளன. தற்போது மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 54 ஆகும்.