Showing posts with label பொன் தீவு கண்டல். Show all posts
Showing posts with label பொன் தீவு கண்டல். Show all posts

Friday, December 20, 2013

பொன் தீவு கண்டல் காணி பிரச்சினை: வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர்கொள்ளும் இன்னுமொரு சவால்!

(அஷ்கர் தஸ்லீம்)

மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொன் தீவு கண்டல் மற்றும் பூவாரசம் குளம் பகுதி தமிழ் கிறிஸ்தவ - முஸ்லிம்களுக்கு இடையிலான காணி சம்பந்தப்பட்ட முறுகல் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பலத்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளால் விரட்டப்பட்டு புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு, பூவாரசம் குளம் மற்றும் பொன் தீவு கண்டல் பகுதிகளுக்கு இடைப்படட பிரதேசத்தில், அரசாங்கத்தால் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகள் தமது பூர்வீக பிரதேசம் என்றும் அவையும் தமக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ் கிறிஸ்தவ தரப்பு கூறி வருகின்றது.