Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Thursday, October 2, 2014

கணவர்களுக்கு மட்டும்!


ஸஹர் கஸ்ஸைமாஹ்

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்


வீட்டை சுத்தமாக்கி விட்டாயா?
இரவுச் சாப்பாடு தயாரா?
குழந்தைகளுக்கு உணவூட்டி விட்டாயா?
எனது ஆடைகளைக் கழுவி விட்டாயா?

மனைவியை மனைவியாக நோக்காது, தனது பணிப் பெண்ணாகவும், குழந்தைகளைப் பெறும் இயந்திரமாகவும் நோக்கும் கணவர்களிடமிருந்து, பெண்கள் இரவு பகலாக செவிமடுக்கும் கேள்விகள்தான் இவை.

பெண்களும் ஆண்களும் மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். ஆனால், சில கணவர்கள் திருமணத்தில் பொதிந்துள்ள உண்மையான விடயங்களையும், தமது மனைவிமாரின் உரிமைகளையும் மதிக்காது நடக்கின்றமை மிகுந்த கவலைக்குரியதாகும்.

இவர்கள் வெற்றிகரமான குடும்பமொன்றின் அஸ்திவாரமான குழந்தைகளின் சந்தோசம், சகாக்ககள் ஆகியவற்றைப் பிடுங்கிக் கொள்கின்றனர். இவ்வாறான சமநிலையற்ற நிலைமை தொடர்கின்றபோது, குடும்பம் பிரச்சினைகளுக்குள்ளும் கவலைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்கின்றது.

மார்க்க பக்தியுள்ள குடும்பங்களில் கூட, தமது மனைவியரை சரியாகப் புரிந்து கொள்ளாத, திருமணம் முடித்த ஒரு ஜோடிக்கு இடையிலான உறவைப் புரிந்து கொள்ளாத கணவர்களைக் காணலாம்.

Wednesday, August 20, 2014

பன்மை சமூகத்தைப் புரிந்து கொள்ளல்



அஷ்கர் தஸ்லீம்

இன்றைய உலகம் நிலத்தால் வரையறை செய்யப்பட்ட “நாடு”களாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாடும் வித்தியாசமான இனங்களையும் மதங்களையும் பிரதிநித்துவம் செய்கின்ற மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வேறுபட்ட இனங்களும் மதங்களும் உள்ள ஒரு சூழலில் கலாசார பன்மைத்துவத்தை அவதானிக்கலாம்.

கீழைத்தேய நாடுகள் பாரம்பரியமாகவே பல்வேறு இனங்கள் செறிந்து வாழும் இயல்பைப் பெற்றுள்ளன. உதாரணமாக இந்தியாவில் பலநூறு மொழிகளைப் பேசும் இனத்தவர்கள் வாழ்வதைக் குறிப்பிடலாம். இந்தியாவின் தெற்கில் உள்ளவர்களுக்கும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் இடையிலான வெளிப்புற தோற்றம் சூடானியர்கள், மங்கோலியர்கள் அளவு வித்தியாசமானது.

மேற்குலகும் பல் இன இயல்பைக் கொண்டிருந்தபோதும், கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் இடம்பெற்ற குடியேற்றங்கள் காரணமாக, மேற்குலக நாடுகளில் ஆசிய இனத்தவர்களினதும் வட ஆபிரிக்கர்களினதும் பிரசன்னம் அதிகமாகியது.

பிரான்ஸில் 10 சதவீத அளவில் வடஆபிரிக்க அரபு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஜேர்மனில் துருக்கியர்கள் மிகப் பெரும் அளவில் வாழ்கின்றனர். பாகிஸ்தானிகளும், இந்தியர்களும், பங்காளிகளும் மேற்கு நாடுகளில் பெருமளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளனர்.

Thursday, December 12, 2013

பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆய்வு மாநாடு

(அஷ்கர் தஸ்லீம்)

பேராதனை பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறையின் ஏற்பாட்டில் 'பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம்' என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 27 ஆம் திகதி, தேசிய ஆய்வு மாநாடொன்று நடாத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்கு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு நிதியுதவி அளித்திருந்தது.

முழுநாள் மாநாடாக நடைபெற்ற இதில் விஷேட பேச்சாளராக கலாநிதி சுக்ரி, விஷேட அதிதியாக பேராசிரியர் தீரானந்த தேரர், சிறப்பு அதிதியாக நீதிபதி சீ.ஜீ வீரமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறை 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் இத்துறையில் பட்டப்பின்படிப்புக் கற்கைகளைக் கொண்டிருக்கின்ற ஒரே பல்கலைக்கழகம் இதுதான்.