Thursday, February 6, 2014

இலங்கையின் தேசிய கீதம் - சில வரலாற்றுக் குறிப்புக்கள்


ஆனந்த சமரகோன்
ஒரு நாட்டின் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையிலேயே தேசிய கீதங்கள் அமைகின்றன. தேசிய கீதம் என்பது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையின் தேசிய கீதம் பற்றித் தேடிப்பார்க்கையில், இலங்கையில் பல தேசிய கீதங்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி நிலவிய காலத்தில், பிரித்தானியாவுக்காகப் பாடப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது. 1745 இல் இலங்கை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது.

Friday, January 24, 2014

ரஷ்ய தூதரகத்துக்காக காணிகளை இழக்கப்போகும் முஸ்லிம்கள் - பள்ளிவாசலும் அகற்றப்படலாம்!




ரஷ்ய தூதரகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சி

(அஷ்கர் தஸ்லீம்)

 7 பௌத்தாலோக மாவத்தை அஷ்ரப் மாவத்தையிலுள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலையும் அதனைச் சூழ உள்ள வீடுகளையும் அகற்றுமாறு அரசாங்கம் விடுத்துள்ள பணிப்புரை பிரதேச வாசிகளை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அப்புறப்படுத்துமாறு வேண்டப்பட்டிருக்கும் மஸ்ஜதுன் நூர்




அஷ்ரப் மாவத்தைக்கு அருகாமையில் ரஷ்ய நாட்டின் தூதரகம் அமையவுள்ளது. எனவே, அதனை அண்மித்துள்ள பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலையும் அதனைச் சூழவுள்ளவர்களையும் அப்புறப்படுத்துமாறு ரஷ்ய தூதரகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Friday, December 20, 2013

பொன் தீவு கண்டல் காணி பிரச்சினை: வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர்கொள்ளும் இன்னுமொரு சவால்!

(அஷ்கர் தஸ்லீம்)

மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொன் தீவு கண்டல் மற்றும் பூவாரசம் குளம் பகுதி தமிழ் கிறிஸ்தவ - முஸ்லிம்களுக்கு இடையிலான காணி சம்பந்தப்பட்ட முறுகல் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பலத்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளால் விரட்டப்பட்டு புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு, பூவாரசம் குளம் மற்றும் பொன் தீவு கண்டல் பகுதிகளுக்கு இடைப்படட பிரதேசத்தில், அரசாங்கத்தால் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகள் தமது பூர்வீக பிரதேசம் என்றும் அவையும் தமக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ் கிறிஸ்தவ தரப்பு கூறி வருகின்றது.

Thursday, December 12, 2013

பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆய்வு மாநாடு

(அஷ்கர் தஸ்லீம்)

பேராதனை பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறையின் ஏற்பாட்டில் 'பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம்' என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 27 ஆம் திகதி, தேசிய ஆய்வு மாநாடொன்று நடாத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்கு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு நிதியுதவி அளித்திருந்தது.

முழுநாள் மாநாடாக நடைபெற்ற இதில் விஷேட பேச்சாளராக கலாநிதி சுக்ரி, விஷேட அதிதியாக பேராசிரியர் தீரானந்த தேரர், சிறப்பு அதிதியாக நீதிபதி சீ.ஜீ வீரமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறை 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் இத்துறையில் பட்டப்பின்படிப்புக் கற்கைகளைக் கொண்டிருக்கின்ற ஒரே பல்கலைக்கழகம் இதுதான்.

Friday, November 8, 2013

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு பற்றிய சுருக்கமான தொகுப்பு

 (அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்)



பொதுநலவாய நாடுகள் என்றால் என்ன?

பொதுநலவாய நாடுகள் (Commonwealth Nations) என்பது பிரித்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழிலிருந்து பின்னர் சுதந்திரமடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். இது உலகில் பழைமை வாய்ந்த அரசியல் கூட்டமைப்புக்களில் ஒன்றுமாகும். இந்த நாடுகள் இணைந்து 1949 ஆம் ஆண்டு பொதுநலவாயத்தை ஸ்தாபித்தன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது இதில் 8 நாடுகளே அங்கத்துவத் தைப் பெற்றிருந்தன.


பொதுநலவாயத்தில் தற்போது 19 ஆபிரிக்க நாடுகளும், 11 தென் பசுபிக் நாடுகளும், 10 கரீபியன் நாடுகளும், 8 ஆசிய நாடுகளும், 3 அமெரிக்க நாடுகளும், 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கத்துவம் பெற்றுள்ளன. பிரித்தானிய சாம்ராஜ்யத்துடன் வரலாற்று ரீதியான உறவுகள் இல்லாதபோதும், ருவாண்டா, மொஸாம்பிக் ஆகிய நாடுகளும் அண்மையில் பொதுநலவாயத்தில் இணைந்து கொண்டுள்ளன. தற்போது மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 54 ஆகும்.

Friday, October 25, 2013

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு பணம் சேர்க்கவே எமது பிராந்தியத்தில் போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகிறது - அதுரலியே ரதன தேரர்

rathana himi mp


நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்இன்ஸாப் ஸலாஹுதீன்

இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனை எந்நிலையில் உள்ளது?

இலங்கையில் போதைப் பொருள் பாவனையின் அளவுசமீபத்தில் அதிகரித்திருப்பதாகத் தெரிகின்றது. போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் முக்கியமான குழுக்களுள் அல்காஈதா இயக்கம் பிரதான இடத்தை வகிக்கின்றது. அவர்களுக்குத் தேவையான பணத்தை இதன் மூலம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். கஸகஸ்தான்ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தப் போதைப் பொருள்களை பாரியளவில் விதைக்க முடியும். எனவேஇவை பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு வந்து,இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் ஒரு முறைமை உருவாகியிருன்றது என்பதுதான் தற்போது பார்க்கக் கிடைக்கும் தகவல்கள்.

இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டு வரும் பிரதான இடமாக பாகிஸ்தான் உள்ளது. இலங்கைக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள போதைப் பொருட்களில் 99 வீதமானவை பாகிஸ்தானிலிருந்தே கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களில், 99 வீதமானோர் பாகிஸ்தானியர்களே

Thursday, October 3, 2013

என்றோ ஒரு நாள் மதச்சார்பற்ற அரசியல் கொண்ட நாடாக இந்த நாடு மாற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்: ராவய, பிரதம ஆசிரியர் கே.டபிள்யூ ஜனரஞ்சன உடனான நேர்காணல்

சட்டத்தரணி கே.டபிள்யூ ஜனரஞ்சன அவர்கள் பிலியன்தலயைச் சேர்ந்தவர். 1991 களில் ராவய பத்திரிகையில் கார்டூன் ஓவியராக இணைந்தார். பின்னர், அதன் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். தற்போது அதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

நேர்காணல் – அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்


நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலை எப்படி நோக்குகிறீர்கள்?

மாகாணசபை தேர்தலை நோக்கும் போது நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்தத் தேர்தல் வடக்கிற்கு மாத்திரம் உரிய தேர்தல்தான். அல்லது வடக்கில் மாத்திரம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலாகும். வடக்கில் அரசாங்கம் தோல்வியைத் தழுவும் என்பதனை அறிந்தே இருந்தது. அதனை சமப்படுத்துவதற்காகவே மத்திய, வடமேல் மாகாணங்களில் தேர்தலை நடத்த வேண்டி வந்தது. வடக்கின் தோல்வியை இந்த இரண்டினதும் வெற்றியைக் கொண்டு சமப்படுத்துவதே இதன் நோக்கம். சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த இரண்டையுமே அழுத்தம் கொடுத்துப் பேசின.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கின் தேர்தல் முக்கியமானது. ஆனால், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் பல புரளிகளைக் கிளப்பியது. சிங்கள பௌத்தர்களுக்கு மத்தியில் இது தனிநாட்டுக் கோரிக்கையை கொண்டது, நாட்டைப் பிரிக்கும் உள் நோக்கம் கொண்டது என்ற கருத்துக்கள் பரப்பப்பட்டன. இது ஜனநாயக நீரோட்டத்தில் அவர்களுக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பமாகும். எனவே, அவர்களது பயணம் எப்படி அமையப் போகின்றது என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.