Showing posts with label அர்தூகான். Show all posts
Showing posts with label அர்தூகான். Show all posts

Sunday, August 10, 2014

துருக்கி ஜனாதிபதித் தேர்தல் 2014 - வெல்லப்போவது யார்?

ரஜப் தையிப் அர்தூகான்

(அஷ்கர் தஸ்லீம்)

-இக்கட்டுரை அல்ஜஸீரா இணையதள செய்தியை தழுவி எழுதப்பட்டுள்ளது.-

இன்று (10.08.2014) துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் முன்னணி வேட்பாளராக உள்ளார்..

துருக்கி வரலாற்றில் முதற் தடவையாக, ஜனாதிபதி ஒருவர் இம்முறை மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அரசியலமைப்பு சீர்திருத்தம் 2007 இல் கொண்டு வரப்பட்டது.

கலாசார ரீதியாக பிரிந்து போயுள்ள துருக்கியில்10 வருடங்களுக்கு மேற்பட்ட தனது ஆட்சியை அர்தூகான் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, June 6, 2012

அர்தூகான் எனும் அரசியல் ஆளுமை






சமகால அரபு இஸ்லாமிய உலகில் மிகுந்த மக்கள் அபிமானத்தை வென்ற தலைவர்களுள் துருக்கியப் பிரதமர் அர்தூகான் முன்னணியிலுள்ளார் என்பதில் எதுவித ஐயமும் இருப்பதாகத் தெரியவில்லை. இஸ்லாமியவாதிகள், முஸ்லிம் அல்லாத நடுநிலைப் போக்கு கொண்டோர் எனப் பல தரப்பினரும் அவரை ஆதரிக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மிக முக்கிய காரணம் அவர் துருக்கியை பொருளாதார சுபீட்சத்தைநோக்கி வழிநடாத்திச் சென்றார் என்பதற்கப்பால், அவர் சர்வதேச அரசியலில் நேர்மைக்காகப் போராடுகிறார் என்பதுதான்.

1954 ல் துருக்கியின் Rize என்ற கிராமத்தில் பிறந்தார் அர்தூகான். தனது ஐந்து குழந்தைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனக் கருதிய அர்தூகானின் தந்தை குழந்தைகளோடு இஸ்தான்புல் நகருக்குக் குடிபெயர்ந்தார். அப்போது அர்தூகானுக்கு வயது 13. ஆரம்பக் கல்வியை இஸ்லாமியப் பாடசாலையொன்றில் பெற்ற அர்தூகான், பின்னர் இஸ்தான்புல் மர்மரா பல்கலைக்கழகத்தில் இனைந்து முகாமைத்துவத்   துறையில் பட்டப் படிப்பை முடித்தார். அர்தூகான் தொழில் ரீதியில் ஒரு உதைப்பந்தாட்ட வீரரும் ஆவார்.