![]() |
| ரஜப் தையிப் அர்தூகான் |
(அஷ்கர் தஸ்லீம்)
-இக்கட்டுரை அல்ஜஸீரா இணையதள செய்தியை தழுவி எழுதப்பட்டுள்ளது.-
இன்று (10.08.2014) துருக்கியில்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரஜப் தையிப்
அர்தூகான் முன்னணி வேட்பாளராக உள்ளார்..
துருக்கி வரலாற்றில்
முதற் தடவையாக, ஜனாதிபதி
ஒருவர் இம்முறை மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அரசியலமைப்பு சீர்திருத்தம்
2007 இல் கொண்டு வரப்பட்டது.
கலாசார ரீதியாக பிரிந்து
போயுள்ள துருக்கியில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட தனது ஆட்சியை அர்தூகான்
தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

