Monday, February 18, 2019

பால்மா குறித்து கலக்கம் வேண்டாம் -Halal Accreditation Council-



நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் பாம் எண்ணெய், லக்டோஸ் ஆகியவற்றின் கலவை என்றும் அவற்றில் பன்றிக் கொழுப்பும் கலக்கப்பட்டள்ளது என்றும் தனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பிரதியமைச்சர் புத்திக பதிரண சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் இது குறித்து அவர் இப்போது பேசி வருகிறார்.

இவ்வாறான முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில் இது குறித்த விளக்கத்தைப் பெறுவதற்கு நாம் இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையை தொடர்பு கொண்டோம். இப்பேரவையின் உள்ளக ஷரீஆ பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் இர்ஃபான் முபீன் விளக்கங்களை வழங்கினார்.

Thursday, November 15, 2018

அனைவரதும் உயர் கல்விக் கனவை நனவாக்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


கொழும்பு நாவலயில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தலைமை வளாகம்.

இலங்கையில் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களில், இஸட் புள்ளிகளின் அடிப்படையில் வருடாந்தம் 30,000 மாணவர்களே தேசிய அரச பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
எனவே, உயர் தரப்ப பரீட்சையில் சித்தியடையும் பெரும் தொகை மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகம் சென்று படிக்க முடியவில்லையே என்று இவர்கள் கவலையடையத் தேவையில்லை! ஏனென்று கேட்கிறீர்களா? தொடர்ந்தும் கட்டுரையை வாசியுங்கள்.

Monday, December 26, 2016

தொல்பொருள் இடங்களை அழிக்குமாறு இஸ்லாம் கூறுகிறதா?

இந்தோனோசியாவிலுள்ள 09 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபதூர் விகாரை

அஷ்கர் தஸ்லீம்
புராதன தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிதைக்கும்படி இஸ்லாம் போதிப்பதாக, பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இஸ்லாம் இவ்வாறான கருத்துக்கைள ஒருபோதும் போதித்ததில்லை. இது இஸ்லாத்தின் மீது அபாண்டம் சுமத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
இந்த விவகாரம் குறித்து நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மறாhக, இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்த நாட்டின் சிங்களவர், பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான இடங்களல்ல. மாறாக, இந்த நாட்டின் அனைவருக்கும் சொந்தமானது என்பதையே தேரர் புரிய வைத்ததாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உண்மையில், தொல்பொருள் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை அழிக்கும்படி இஸ்லாம் ஒருபோதும் போதித்ததில்லை. மாறாக, இப்போது பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளாக உள்ள நாடுகளில், இஸ்லாத்துக்கு முன்னர் காணப்பட்ட மதங்களின் அடையாளங்களை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பெரும் அக்கறை எடுத்துள்ளனர்.

Monday, December 12, 2016

நபிகளாரின் போதனைகள் அகிலத்தாரையடைய முஸ்லிம்கள் தடையாக இருந்துவிடக்கூடாது!

அஷ்கர் தஸ்லீம்

அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த சிறப்புமிகு நாளில், நபிகளாரின் மணம் கமழும் வாழ்வு, அவரது போதனைகள் என்பன குறித்து நாம் ஒரு கனம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
இந்த அகிலத்தாருக்கு வழிகாட்டுவதற்காக, இறைவன் காலத்துக்கு காலம் நபிமார்களையும் தூதுவர்களையும் இந்த உலகுக்கு அனுப்பினான். அந்தத் தொடரில் இறுதியாக வந்த நபியும் தூதருமே பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு இந்த அகிலத்தாருக்கு முன்னுதாரணமானதாகும். ஒரு மனிதனின் வாழ்வில் அவன் சந்திக்கின்ற அனைத்து கட்டங்களுக்குமான அழகிய முன்னுதாரணங்களையும் வழிகாட்டல்களையும் நபிகளார் தனது வாழ்வு மூலம் தந்துள்ளார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் அவர் உதிர்த்த பொன்மொழிகள், அவரது நடத்தைகள், போதனைகளை எடுத்தொழுகுவதன் மூலம், இவ்வுலகத்தாருக்கு வெற்றி கிட்டும்.

Sunday, November 27, 2016

ஒரு இனத்துக்கான நிகழ்ச்சி நிரல்கள் பன்மை சமூக அமைப்பிற்கு பாதிப்பு - அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் புரிந்துகொள்வார்களா?



ரவூப் ஹக்கீம்
அஷ்கர் தஸ்லீம்

சமகால சூழ்நிலைகளை கருத்திற்கொண்டுஇலங்கை முஸ்லிம் அரசியல் புனருத்தாரணம் செய்யப்படல் வேண்டும் என்பது தவிர்க்க முடியாத வாதமாக தற்போது எழுந்து வருகின்றது. இவ்வளவு காலமும் முஸ்லிம் அரசியல் எவ்வாறான பாத்திரத்தை வகித்து வந்தது என்ற வரலாற்றை ஒருகணம் மீள்விசாரணை செய்துஅதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் முஸ்லிம் அரசியல் உள்ளது.
மன்னர் காலம் தொட்டு இன்று வரையிலான முஸ்லிம் அரசியலை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து நோக்க முடியும். இந்த ஒவ்வொரு காலப் பகுதியிலும்இந்த நாட்டின் தலைமைத்துவங்களோடு சேர்ந்துஇந்த நாட்டை வளப்படுத்தும் பணியில் முஸ்லிம் அரசியல் பங்களிப்பு செய்திருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால்பல்வேறு அரசியல் கருத்தியல்கள் செல்வாக்கு செலுத்துகின்றஇந்த நவீன யுகத்தில்முஸ்லிம் அரசியலின் போக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது முக்கியமானதாகும். இதற்காகதற்போதைய முஸ்லிம் அரசியலை விமர்சனபூர்வமாக நோக்குவது தவிர்க்க முடியாத காரணியாக உள்ளது.

Tuesday, October 11, 2016

மத்திய கிழக்கு மீதான அமெரிக்க யுத்தம்: 'போலி செய்திகளும் பொய்யான கொடிகளும்'


ஜனாதிபதி சட்டத்தரணி எம்எம். சுஹைர்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அல்காஇதா தலைவர்கள் வீடியோக்களில் தோன்றி, அமெரிக்க கூட்டணி மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு பதிலடியாக, மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தாக்குதல் மேற்கொள்வதாக எச்சரித்த பயங்கரமான வீடியோக்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றனவா? வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் தலைகளை வெட்டுவதற்காக, கையில் கத்தி ஏந்திய வண்ணம் காட்சி தந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கொலையாளிகளின் புகைப்படங்கள் நினைவிருக்கின்றனவா?
இதுபோன்ற வெறுக்கத்தக்க வீடியோக்களும், புகைப்படங்களும் உலகெங்கும் பரவியுள்ளதை நீங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் பார்த்திருப்பீர்கள். ஆனால்,உண்மையாக கொலை செய்யப்படும் காட்சிகள் கொண்ட வீடியோக்களை நான் இன்னும் பார்த்ததில்லை. கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட வீடியோக்களைகூட நான் பார்த்ததில்லை. கொலை செய்வதற்கு முன்னர் மாத்திரம் வீடியோ எடுப்பதற்கோ, புகைப்படம் எடுப்பதற்கோ அவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்? ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் மிருகத்தனங்கள் வெளிக்காட்டப்பட வேண்டுமாயின், கொலை செய்யப்படும் காட்சிகள் அல்லது கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் சிந்திக்கலாம்.
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபோது,ஈராக்கில் அமைக்கப்பட்ட கேம்ப் விக்டரியில் (Camp Victory), அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணிபுரிந்த ஒரு பிரித்தானிய கம்பனி, பொய்யான செய்திகளையும், பொய்யான டிவிடிக்களையும் (DVD) தயாரித்து வந்துள்ளதாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளர் பணியகம் தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும், இந்த பெருமளவிலான போலி செய்திகளின் உள்ளடக்கம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது.

Thursday, September 15, 2016

புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்கு சில அறிவுரைக் குறிப்புக்கள்...



அஷ்கர் தஸ்லீம்

இலங்கையின் புத்தக பிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் என்றால் ஒரு புது உற்சாகம் பிறப்பது இயல்புதான். ஏனெனில், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வருடாந்தம் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதமல்லவா நடைபெறுகின்றது.

இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வழமைபோன்றே, புத்தகப் பிரியர்கள் தமக்கு தேவையான புத்தகங் களையும், புதிதாக வெளி வந்துள்ள புத்தகங் களையும் பெற்றுக் கொள்வதற்கு, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் விசேடம் என்னவென்றால், இலங்கையின் பிரபலமான அனைத்து வெளியீட்டாளர்களும் போல், இங்கு கலந்து கொள்வதுதான். எனவே, இலங்கையில் வெளிவரும் மிகப் பெரும்பாலான அனைத்து புத்தகங்களும் போல் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றது.

புத்தக வெளியீட்டாளர்கள் போன்றே, இலங்கையிலுள்ள புத்தக கடைகளும் இங்கு தமது விற்பனை கூடங்களை அமைத்திருப்பது இன்னுமொரு விசேடமாகும். எனவே, பல புத்தகக் கடைகளுக்கு ஏறி இறங்கி கஷ்டப்படுவதை விடவும், ஒரே இடத்தில் அனைத்து புத்தகக் கடைகளினதும் விற்பனைக் கூடங்களை தரிசிக்கும் வாய்ப்பு இங்கு ஏற்படுகின்றது.

சரி நண்பர்களே, இம்முறை இந்த புத்தக கண்காட்சிக்குச் செல்லும் உங்களுக்கான சில ஆலோசனைகளை, இந்த கட்டுரையில் நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். நாம் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆலோசனைகள் உங்களுக்கு பிரயோசனமளிக்கும் என்று நம்புகிறோம்.