கடந்த மே மாதம் (2014) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கிண்ணியாவுக்கு சென்றிருந்தேன். கிண்ணியா முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசம். அங்கிருந்தபோது நான் கிண்ணியா மக்கள் குறித்து முகநூலில் இட்ட ஒரு பதிவையும், அதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களில் தெரிந்தெடுத்த சிலவற்றையும் வலைத்தளத்திலும் பதிகிறேன். இங்கு பதிவேற்றியுள்ள படங்கள் மங்கோலிய மலாய, ஆபிரிக்க முகசாயலைக் காட்டுவதற்கான படங்களேயன்றி, கிண்ணியாவைச் சேர்ந்தவர்களுடையதல்ல.
தற்போது நான் கிண்ணியாவில் உள்ளேன். இதற்கு முதல் 5, 6 தடவைகள் கிண்ணியாவுக்கு வந்தும் உள்ளேன்.
நாம் தரிசிக்கும் ஊர்களின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் மற்றும் அந்த ஊர் பற்றிய இன்னோரன்ன விடயங்களையும் கேட்டறிந்து கொள்வது சுவாரஷ்யமானது.
