Wednesday, June 14, 2023

Turkey, Sweden and NATO: Ball is in Sweden's court!


Ashkar Thasleem

The Russian invasion of Ukraine has led Finland and Sweden to apply for NATO membership, abandoning their longtime military neutrality. They see NATO as a protector from potential Russian threats in the future.

All member countries have ratified Finland’s accession, a condition NATO made a must to obtain new membership in the transatlantic military alliance, but Turkey and Hungary have yet to ratify Sweden’s accession.

Turkey asserts that Sweden must take the necessary actions to prevent PKK terrorists from operating in Sweden, a demand Sweden agreed upon but has not acted upon, Turkey believes.

Sunday, March 26, 2023

Diploma in Arabic Language (South Eastern University of Sri Lanka)


தென்கிழக்கு பல்கலைக்கழகதில் அரபு மொழி டிப்ளோமா கற்கைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மேலதிக விபரம்:



 

Certificate in Arabic Language (South Eastern University of Sri Lanka)

 தென்கிழக்கு பல்கலைக்கழகதில் அரபு மொழி சான்றிதழ் கற்கைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மேலதிக விபரம்:




Friday, March 24, 2023

குட்டி குட்டி தீவுகளின் தேசம் மாலைத்தீவுகள்


மாலைத்தீவுகள் இலங்கையிலிருந்து தென் மேற்குப் பகுதியாக சுமார் 700 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தீவுகளினாலான ஒரு நாடாகும். இங்கு சுமார் 1200 தீவுகள் காணப்படுகின்றன. இவற்றில் எந்தவொரு தீவும் கடல் மட்டத்திலிருந்து 1.8 மீற்றர்களை விட உயரமானதாக இல்லை. அத்தோடு, பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிப்பதுமில்லை. 

அழகிய கடற்கரைகளையும், மணல் பாங்கான நிலத்தையும் கொண்டிருப்பதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நாடாகவும் மாலைத்தீவுகள் மாறியுள்ளது. எனவே, சுற்றுலாத் துறையானது மாலைத்தீவுகளின் வருமானத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான துறையாக உள்ளது.

மாலைதீவின் பிரதான வருமான வழியாக சுற்றுலாத் துறை இருக்கின்ற அதேவேளை, மீன்பிடித் துறை மற்றும் படகு தயாரித்தல் துறை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடிக்கின்றன. எனவே, மாலைதீவின் பிரதான வருமான வழிகள் அனைத்தும் கடலைச் சார்ந்ததாக இருப்பதை அவதானிக்கலாம்.

298 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட மாலைத்தீவுகளின் சனத்தொகை 324,000 பேராவர். இவர்கள் திவெஹி மொழியை பேசுகின்றனர். இந்த மொழியானது மாலைத்தீவர்களாலும், மாலைத்தீவுகளை அண்மித்ததாக உள்ள இந்திய லக்சத்வீப் யூனியனில் உள்ள மினிகோய் தீவிலுள்ளோராலும் பேசப்படுகின்றது. 

பெரும்பாலும் அனைத்து மாலைத்தீவர்களும் ஒரே இனத்தவர்களாவர். வரலாறு நெடுகிலும் பல்வேறுபட்ட மக்கள் மாலைதீவில் குடியேறியுள்ளார். இங்கு குடியேறிய முதலாமவர்கள் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த தமிழர்களும், சிங்களவர்களும் என்றே நம்பப்படுகின்றது. 

அத்தோடு, மடகஸ்கார், அரபு நாடுகள், மலேசியா, சீனா போன்ற பகுதிகளிலிருந்து வந்த மக்களும் மாலைத்தீவுகளை தரிசித்துள்ளனர். மாலைத்தீவர்கள் பேசும் திவெஹி மொழி ஒரு இந்து-ஐரோப்பிய மொழியாகும். அரபு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் மத, பொருளாதார, தொடர்பாடல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

12 ஆம் நூற்றாண்டில் மாலைத்தீவுகளில் இஸ்லாம் அறிமுகமானது. அதனைத் தொடர்ந்து மாலைதீவர்கள் இஸ்லாத்தை ஏற்கத் தொடங்கினர். இன்று இஸ்லாம் தான் மாலைத்தீவுகளின் பிரதான மதமாகும். 

மாலைத்தீவுகள் 1558 முதல் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டது. நாட்டு மக்களின் எதிர்ப்பு காரணமாக 1573 இல் போர்த்துக்கேயர் அங்கிருந்து வெளியேறினர். மீளவும் 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சி செய்த டச்சுக்காரர்களின் ஆக்கரமிப்புக்கு மாலைத்தீவுகள் உட்பட்டது. 1796 இல் பிரித்தானியரின் வசமானது மாலைத்தீவுகள். பின்னர், 1965 ஜுலை 26 ஆம் திகதி பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

2004 இல் தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளை சுனாமி தாக்கியபோது, மாலைத்தீவுகளும் பாதிக்கப்பட்டது. பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. பல தீவுகள் மிக மோசமானப் பாதிக்கப்பட்டன. இந்த சுனாமி அனர்த்தத்தினால் மாலைத்தீவுகளின் அபிவிருத்தி 20 வருடங்களால் பின்னோக்கிச் சென்றதாக மாலைத்தீவுகள் அரசாங்கம் தெரிவித்திருந்தது. 



மாலைத்தீவுகள் தகவல் பெட்டகம்

உத்தியோகபூர்வ பெயர் : மாலைத்தீவுகள் குடியரசு

பரப்பளவு                         : 298 சதுர கி.மீ.

பிரதான மொழி                 : திவெஹி

பிரதான மதம்                 : இஸ்லாம்

ஆயுள் எதிர்பார்ப்பு                 : 76 (ஆண்), 79 (பெண்)

நாணயம்                         : ரூஃபியா



Sunday, February 19, 2023

கொழும்புப் பல்கலைக்கழக நூலக கற்கைகள்


கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் தகவல் விஞ்ஞான தேசிய நிறுவனம் நடாத்தும் சான்றிதழ், டிப்ளோமா, உயர் டிப்ளோமா கற்கைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத் திகதி: 15 மார்ச் 2023

மேலதிக விபரம்:

Advanced Certificate in Librarianship (ACL)

Diploma in School Librarianship (DSL)

Diploma in Library & Information Management (DLIM)

Higher Diploma in Library and Information Management 1 and 2 (HDLIM)

Monday, April 27, 2020

நெட்டை நெட்டை சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி - அரிய தகவல்கள்





அஷ்கர் தஸ்லீம்

ஒட்டகச்சிவிங்கி தான் உலகிலுள்ள மிக உயரமான பாலூட்டி விலங்காகும். அது கொண்டிருக்கின்ற உயரமான கால்களும், கழுத்தும் தான் இதற்கான காரணம். ஆபிரிக்க கண்டத்திலுள்ள திறந்த வெளி புல்நிலங்களில் இவற்றைக் காணலாம்.

ஒரு ஒட்டகச்சிவிங்கியின் கால்கள் ஒரு மனிதனின் சராசரி உயரமான 6 அடியையும் விட உயரமானதாகும். இந்த நீண்ட கால்களின் உதவியால், குறுகிய தூரங்களை மணிக்கு 35 மைல் வேகத்திலும், நீண்ட தூரங்களை சொகுசாக மணிக்கு 10 மைல் வேகத்திலும் கடக்கும் திறன் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு உள்ளது.

Monday, September 16, 2019

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் வரலாறு - தொடர் 02




பேராசிரியர் அப்துல் அஸீம்
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

இஸ்லாத்தில் நிதியளிப்பிற்கான முறையான ஏற்பாடு
இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில், முறையான நிதியளிப்பின் அடித்தளத்தை குறிக்கும் முதல் நிறுவனமாக பைதுல் மால் (நிதி இல்லம்) அல்லது பொது திறைசேரி அமைந்திருந்தது. அடிப்படையில் இது ஒரு அரச நிதி நிறுவனமாகும். ஆனால், இது தனிநபர்களுக்கும் கடன்கள் அல்லது முதலீட்டு மூலதனத்தை வழங்கியது. இது கலீபாவிற்கும் பொதுமக்களுக்குமான ஒரு அரச வங்கியாக இயங்கியது. உதாரணமாக, இரண்டாவது கலீபாவான உமர் (ரழி) அவர்கள், வணிக நோக்கத்திற்காக 4000 (திர்ஹம்) தொகையை ஹிந்த் என்பவருக்குக்கு வழங்கினார் (அத்தபரி, 1407 ஹி., தொகுதி 2, பக். 576-77). 
பொது நிதியிலிருந்து வர்த்தக நோக்கத்திற்காக கடன் வழங்கப்பட்டதற்கு மற்றொரு உதாரணமும் உள்ளது. பஸராவின் ஆளுநரான அபூ மூசா அல்-அஷ்அரி (கி.பி. 662 மற்றும் 672 க்கு இடையில்), பைதுல்மாலுக்கு வழங்குவதற்காக மதீனாவில் உள்ள மத்திய திறைசேரிக்கு சிறிது பணம் அனுப்ப வேண்டியிருந்தது. இஸ்லாமிய கிலாபத்தின் தலைநகரான மதீனாவுக்குப் பயணிக்க விரும்பிய அப்துல்லாஹ் மற்றும் உபைதுல்லாவுக்கு (உமர் இப்னுல் கத்தாபின் இரண்டு மகன்கள்) அவர் அந்தத் தொகையை வழங்கினார். பின்னர் அவர்களிடம், 'நீங்கள் ஈராக்கிலிருந்து பொருட்களை வாங்கி மதீனாவில் விற்கலாம். பின்னர், மூலதனத்தை அமீருல் முஃமினீனுக்குக் (கலீபாவுக்கு) கொடுங்கள். இலாபத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.' என்றார். ஈராக்கில் பொருட்களை வாங்கி மதீனாவில் விற்றதன் மூலம், அவர்கள் இலாபம் ஈட்டினர். பின்னர், அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு மூலனத்தை செலுத்தியபோது, மூலதனம் மற்றும் இலாபம் ஆகிய இரு தொகையையும் ஒப்பகை;கும்படி அவர் கூறினார். அப்துல்லாஹ் அமைதியாக இருந்தார். ஆனால், இளைய மகன் உபைதுல்லாஹ் ஆட்சேபனை தெரிவித்தார்: 'மூலதனம் குறைந்துவிட்டால் அல்லது அழிக்கப்பட்டிருந்தால், நாங்கள் அதற்கு உத்தரவாதம் அளித்திருப்போம். எனவே எங்களுக்கு இலாபம் கிடைக்க வேண்டும்.' என்று கூறினார். ஒரு சிறிய வாதத்திற்குப் பிறகு, ஒரு சட்டநிபுணரின் ஆலோசனையின் பேரில், உமர் (ரழி) அவர்கள் அதை ஒரு கூட்டு ஒப்பந்தமாகக் கருத முடிவு செய்து, அசல் பணத்தையும் இலாபத்தின் பாதியையும் ஏற்றுக்கொண்டார். உமர் (ரழி) அவர்களின் இரு மகன்களும் இலாபத்தின் அடுத்த பாதியை எடுத்துக் கொண்டனர் (மாலிக், 2002, . 419, அறிவிப்பு எண் 1396).

Monday, September 9, 2019

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் வரலாறு - தொடர் 01



பேராசிரியர் அப்துல் அஸீம்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்


இந்த ஆய்வுக் கட்டுரையானது, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் முதல் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் இஸ்லாமிய வங்கிகள் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட காலம் வரையில், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவிருக்கின்றது. அத்தோடு, பெரும்பாலும் ஆய்வு செய்யப்படாத ஒரு பகுதியான, இஸ்லாமிய வரலாற்றின் இறுதிப் பகுதிகளில் காணப்பட்ட வங்கியியல் நடவடிக்கைகள் மீதும் அவதானம் செலுத்தவுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையானது, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் காணப்பட்டதையும், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் நவீன இஸ்லாமிய வங்கிகளின் அபிவிருத்திக்கு முன்னைய நிலையையும் பதிவு செய்கின்றது. இஸ்லாமிய வங்கியியலானது பொருளாதார வாழ்க்கையின் நடவடிக்கைகளை இஸ்லாமிய வழிமுறையின்படி செயற்வதற்கான ஒரு முயற்சியாகக் காணப்பட்டது. இது முதலில் கிராமிய மற்றும் விவசாய பொருளாதாரங்களில் உருவானது. மாறாக, வழமையாக சொல்லப்படுவது போன்று பெட்ரோடொலார் அல்லது மத்திய கிழக்கில் எண்ணெய் வள எழுச்சிக்குப் பின்னர் தான் இஸ்லாமிய வங்கியியல் உருவானது என்பது தவறான கருத்தாகும் என்று இந்த ஆய்வு முடிவுரை வழங்குகின்றது.


அறிமுகம்

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் தான், இஸ்லாமிய பொருளாதாரத்தின் மிகவும் கட்புலனாகும் நடைமுறை ரீதியான அடைவாகும். எவ்வாறாயினும், இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதலான இஸ்லாமிய பொருளாதாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்கான முயற்சிகள் அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தத் துறை குறித்த நூல்களில், பொதுவாக, 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பாதிக்கு முன்னைய வங்கியியல் மற்றும் நிதியியல் குறித்த தகவல்களை நாம் காண முடியாது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காணப்பட்ட வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் குறித்தும், நவீன இஸ்லாமிய வங்கிகளின் வருகைக்கு முன்னைய நிலை குறித்தும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அறிந்ததாக இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பவும், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலானது 20 ஆம் நூற்றாண்டின் பிரத்தியேகமான தயாரிப்பு என்ற தவறான புரிதலை நீக்கவும், இந்த ஆய்வுக் கட்டுரை முயல்கின்றது. அத்தோடு, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் முதல் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் இஸ்லாமிய வங்கிகள் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட காலம் வரையில், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்கின்றது. மேலும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் காணப்பட்ட அரை-வங்கியியல் நிறுவனங்கள் குறித்த ஆரம்பகால பதிவுகளையும் இந்த ஆய்வு வழங்குகின்றது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வங்கிகளுக்கான ஒரு மாற்றீடாக இஸ்லாமிய வங்கிகள் வருவதற்கு முன்னர் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை இவ்வாய்வுக் கட்டுரை விளக்குகின்றது. இறுதியாக, இஸ்லாமிய வங்கியியலானது அடையாள உருவாக்கம் அல்லது 'அகில இஸ்லாமிய'த்தின் ஒரு தயாரிப்பு; அது மத்திய கிழக்கின் எண்ணெய் வள நாடுகளால் ஊக்குவிக்கப்பட்டது என்ற கருத்தை மறுக்கின்றது.

Friday, July 19, 2019

ஜம்இய்யதுல் உலமா உட்பட அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய தேசிய பொறிமுறை அவசியம் - அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்


ஜம்இய்யதுல் உலமா உட்பட இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிவில் சமூக நிறுவனங்கள், தரீக்காக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதும், பொது இலக்குகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய மட்டத்தில் செயற்படுவதற்குமான ஒரு சிறந்த பொறிமுறை அடையாளம் காணப்பட்டு அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்பது எனது மிகப்பெரும் எதிர்பார்ப்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் தெரிவித்தார். அவர் வழங்கிய முழுமையான நேர்காணலை கீழே வாசிக்கலாம்.
நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்



உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்துஇலங்கை முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளது?
எவரும் எதிர்பாராத விதத்தில் நடந்த இந்த துன்பியல் நிகழ்வுநாட்டை உலுக்கியது போலஇலங்கை முஸ்லிம்களில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். இப்பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்துஇலங்கை முஸ்லிம் சமூகம் ஒருமித்த குரலில் அதனை முற்றுமுழுதாக ஆட்சேபித்ததோடுமனிதாபிமான கண்ணோட்டத்திலும் பண்பாட்டுக் கண்ணோட்டத்திலும்  இஸ்லாமியக் கண்ணோட்டத்திலும் இந்த ஈனச் செயலை கண்டித்தது.

Thursday, June 27, 2019

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கெம்பஸ்: இதுவரை கிடைத்த தகவல்கள்



லசந்த ருகுணகே


ஷரியா பல்கலைக்கழகம் என்று பிரபலமாக அறிமுகப்படுத்தப்படுகின்ற 'மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட்' நிறுவனம் குறித்து அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர், தெரிவித்து வருகின்றனர். இவற்றுக்கு மத்தியில் அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்களும், அந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கலாம். ஆனாலும், இக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பெரும்பாலானோரிடம், அவற்றுக்கான ஆதாரங்கள் உண்டா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது. ஏனனில், குற்றச்சாட்டு முன்வைப்போர் அதற்குரிய ஆதாரங்களை முன்வைக்காமையே இச்சந்தேகத்துக்கான காரணமாகும்.

நாட்டை குழப்புவதற்கு, தீ வைப்பதற்கு சத்தமிடாதபோதும், இந்த மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட் நிறுவனம் பற்றி பாராளுமன்றத்தில் விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறை கண்காணிப்பு மேலாண்மைக் குழு நியமித்த உயர் கல்வி பற்றிய உப மேலாண்மைக் குழுவுக்கு அப்பொறுப்பு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

Monday, February 18, 2019

பால்மா குறித்து கலக்கம் வேண்டாம் -Halal Accreditation Council-



நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் பாம் எண்ணெய், லக்டோஸ் ஆகியவற்றின் கலவை என்றும் அவற்றில் பன்றிக் கொழுப்பும் கலக்கப்பட்டள்ளது என்றும் தனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பிரதியமைச்சர் புத்திக பதிரண சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் இது குறித்து அவர் இப்போது பேசி வருகிறார்.

இவ்வாறான முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில் இது குறித்த விளக்கத்தைப் பெறுவதற்கு நாம் இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையை தொடர்பு கொண்டோம். இப்பேரவையின் உள்ளக ஷரீஆ பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் இர்ஃபான் முபீன் விளக்கங்களை வழங்கினார்.

Thursday, November 15, 2018

அனைவரதும் உயர் கல்விக் கனவை நனவாக்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


கொழும்பு நாவலயில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தலைமை வளாகம்.

இலங்கையில் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களில், இஸட் புள்ளிகளின் அடிப்படையில் வருடாந்தம் 30,000 மாணவர்களே தேசிய அரச பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
எனவே, உயர் தரப்ப பரீட்சையில் சித்தியடையும் பெரும் தொகை மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகம் சென்று படிக்க முடியவில்லையே என்று இவர்கள் கவலையடையத் தேவையில்லை! ஏனென்று கேட்கிறீர்களா? தொடர்ந்தும் கட்டுரையை வாசியுங்கள்.

Monday, December 26, 2016

தொல்பொருள் இடங்களை அழிக்குமாறு இஸ்லாம் கூறுகிறதா?

இந்தோனோசியாவிலுள்ள 09 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபதூர் விகாரை

அஷ்கர் தஸ்லீம்
புராதன தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிதைக்கும்படி இஸ்லாம் போதிப்பதாக, பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இஸ்லாம் இவ்வாறான கருத்துக்கைள ஒருபோதும் போதித்ததில்லை. இது இஸ்லாத்தின் மீது அபாண்டம் சுமத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
இந்த விவகாரம் குறித்து நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மறாhக, இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்த நாட்டின் சிங்களவர், பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான இடங்களல்ல. மாறாக, இந்த நாட்டின் அனைவருக்கும் சொந்தமானது என்பதையே தேரர் புரிய வைத்ததாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உண்மையில், தொல்பொருள் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை அழிக்கும்படி இஸ்லாம் ஒருபோதும் போதித்ததில்லை. மாறாக, இப்போது பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளாக உள்ள நாடுகளில், இஸ்லாத்துக்கு முன்னர் காணப்பட்ட மதங்களின் அடையாளங்களை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பெரும் அக்கறை எடுத்துள்ளனர்.

Monday, December 12, 2016

நபிகளாரின் போதனைகள் அகிலத்தாரையடைய முஸ்லிம்கள் தடையாக இருந்துவிடக்கூடாது!

அஷ்கர் தஸ்லீம்

அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த சிறப்புமிகு நாளில், நபிகளாரின் மணம் கமழும் வாழ்வு, அவரது போதனைகள் என்பன குறித்து நாம் ஒரு கனம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
இந்த அகிலத்தாருக்கு வழிகாட்டுவதற்காக, இறைவன் காலத்துக்கு காலம் நபிமார்களையும் தூதுவர்களையும் இந்த உலகுக்கு அனுப்பினான். அந்தத் தொடரில் இறுதியாக வந்த நபியும் தூதருமே பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு இந்த அகிலத்தாருக்கு முன்னுதாரணமானதாகும். ஒரு மனிதனின் வாழ்வில் அவன் சந்திக்கின்ற அனைத்து கட்டங்களுக்குமான அழகிய முன்னுதாரணங்களையும் வழிகாட்டல்களையும் நபிகளார் தனது வாழ்வு மூலம் தந்துள்ளார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் அவர் உதிர்த்த பொன்மொழிகள், அவரது நடத்தைகள், போதனைகளை எடுத்தொழுகுவதன் மூலம், இவ்வுலகத்தாருக்கு வெற்றி கிட்டும்.

Sunday, November 27, 2016

ஒரு இனத்துக்கான நிகழ்ச்சி நிரல்கள் பன்மை சமூக அமைப்பிற்கு பாதிப்பு - அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் புரிந்துகொள்வார்களா?



ரவூப் ஹக்கீம்
அஷ்கர் தஸ்லீம்

சமகால சூழ்நிலைகளை கருத்திற்கொண்டுஇலங்கை முஸ்லிம் அரசியல் புனருத்தாரணம் செய்யப்படல் வேண்டும் என்பது தவிர்க்க முடியாத வாதமாக தற்போது எழுந்து வருகின்றது. இவ்வளவு காலமும் முஸ்லிம் அரசியல் எவ்வாறான பாத்திரத்தை வகித்து வந்தது என்ற வரலாற்றை ஒருகணம் மீள்விசாரணை செய்துஅதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் முஸ்லிம் அரசியல் உள்ளது.
மன்னர் காலம் தொட்டு இன்று வரையிலான முஸ்லிம் அரசியலை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து நோக்க முடியும். இந்த ஒவ்வொரு காலப் பகுதியிலும்இந்த நாட்டின் தலைமைத்துவங்களோடு சேர்ந்துஇந்த நாட்டை வளப்படுத்தும் பணியில் முஸ்லிம் அரசியல் பங்களிப்பு செய்திருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால்பல்வேறு அரசியல் கருத்தியல்கள் செல்வாக்கு செலுத்துகின்றஇந்த நவீன யுகத்தில்முஸ்லிம் அரசியலின் போக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது முக்கியமானதாகும். இதற்காகதற்போதைய முஸ்லிம் அரசியலை விமர்சனபூர்வமாக நோக்குவது தவிர்க்க முடியாத காரணியாக உள்ளது.

Tuesday, October 11, 2016

மத்திய கிழக்கு மீதான அமெரிக்க யுத்தம்: 'போலி செய்திகளும் பொய்யான கொடிகளும்'


ஜனாதிபதி சட்டத்தரணி எம்எம். சுஹைர்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அல்காஇதா தலைவர்கள் வீடியோக்களில் தோன்றி, அமெரிக்க கூட்டணி மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு பதிலடியாக, மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தாக்குதல் மேற்கொள்வதாக எச்சரித்த பயங்கரமான வீடியோக்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றனவா? வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் தலைகளை வெட்டுவதற்காக, கையில் கத்தி ஏந்திய வண்ணம் காட்சி தந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கொலையாளிகளின் புகைப்படங்கள் நினைவிருக்கின்றனவா?
இதுபோன்ற வெறுக்கத்தக்க வீடியோக்களும், புகைப்படங்களும் உலகெங்கும் பரவியுள்ளதை நீங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் பார்த்திருப்பீர்கள். ஆனால்,உண்மையாக கொலை செய்யப்படும் காட்சிகள் கொண்ட வீடியோக்களை நான் இன்னும் பார்த்ததில்லை. கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட வீடியோக்களைகூட நான் பார்த்ததில்லை. கொலை செய்வதற்கு முன்னர் மாத்திரம் வீடியோ எடுப்பதற்கோ, புகைப்படம் எடுப்பதற்கோ அவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்? ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் மிருகத்தனங்கள் வெளிக்காட்டப்பட வேண்டுமாயின், கொலை செய்யப்படும் காட்சிகள் அல்லது கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் சிந்திக்கலாம்.
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபோது,ஈராக்கில் அமைக்கப்பட்ட கேம்ப் விக்டரியில் (Camp Victory), அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணிபுரிந்த ஒரு பிரித்தானிய கம்பனி, பொய்யான செய்திகளையும், பொய்யான டிவிடிக்களையும் (DVD) தயாரித்து வந்துள்ளதாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளர் பணியகம் தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும், இந்த பெருமளவிலான போலி செய்திகளின் உள்ளடக்கம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது.

Thursday, September 15, 2016

புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்கு சில அறிவுரைக் குறிப்புக்கள்...



அஷ்கர் தஸ்லீம்

இலங்கையின் புத்தக பிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் என்றால் ஒரு புது உற்சாகம் பிறப்பது இயல்புதான். ஏனெனில், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வருடாந்தம் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதமல்லவா நடைபெறுகின்றது.

இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வழமைபோன்றே, புத்தகப் பிரியர்கள் தமக்கு தேவையான புத்தகங் களையும், புதிதாக வெளி வந்துள்ள புத்தகங் களையும் பெற்றுக் கொள்வதற்கு, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் விசேடம் என்னவென்றால், இலங்கையின் பிரபலமான அனைத்து வெளியீட்டாளர்களும் போல், இங்கு கலந்து கொள்வதுதான். எனவே, இலங்கையில் வெளிவரும் மிகப் பெரும்பாலான அனைத்து புத்தகங்களும் போல் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றது.

புத்தக வெளியீட்டாளர்கள் போன்றே, இலங்கையிலுள்ள புத்தக கடைகளும் இங்கு தமது விற்பனை கூடங்களை அமைத்திருப்பது இன்னுமொரு விசேடமாகும். எனவே, பல புத்தகக் கடைகளுக்கு ஏறி இறங்கி கஷ்டப்படுவதை விடவும், ஒரே இடத்தில் அனைத்து புத்தகக் கடைகளினதும் விற்பனைக் கூடங்களை தரிசிக்கும் வாய்ப்பு இங்கு ஏற்படுகின்றது.

சரி நண்பர்களே, இம்முறை இந்த புத்தக கண்காட்சிக்குச் செல்லும் உங்களுக்கான சில ஆலோசனைகளை, இந்த கட்டுரையில் நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். நாம் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆலோசனைகள் உங்களுக்கு பிரயோசனமளிக்கும் என்று நம்புகிறோம்.

Tuesday, August 30, 2016

ஐ.எஸ். - ஒரு நோய் அறிகுறி, ஆனால் அது நோயல்ல!

ஆங்கிலத்தில்: டானியா ஒகம்பொஸ்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
இஸ்லாமிய தேசம் என்று தம்மை பிரகடனம் செய்து கொண்டு .எஸ் இயக்கம், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 12 வீதமான நிலப் பகுதியை 2016 இன் ஆரம்ப மாதங்களில் இழந்துள்ளது. ஈராக்கிய நகரங்களான ரமாடி மற்றும் பலூஜா ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன. இந்தத் தகவல்கள் .எஸ்.எஸ்ஸின் நெருக்கடி கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், .எஸ் தம் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழக்க ஆரம்பித்தது. ஜூலையின் ஆரம்பப் பகுதியில் .நா உதவியில் லிபியாவில் இயங்கும் அரசு (.எஸ்)இன் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய வட ஆபிரிக்க நகரான சிர்டேயை கைப்பற்றியது. சில நாட்களின் பின்னர், அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் சிரிய எதிர்தரப்பு போராளிகள் சிரியாவின் மன்பிஜ் என்ற பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
.எஸ். யுத்த களத்தில் தோல்வியடைந்து வருவதை சுட்டிக்காட்டுவது போன்று, .எஸ். ஒரு பாரம்பரிய இராணுவம் என்ற தரத்திலிருந்து படிப்படியாக தோல்வியடைந்து வரும் வேகம் அதிகரிக்கும் என்பது புலனாகின்றது.
சிரியாவிலும் ஈராக்கிலும் இன,மத சூழலமைவு மிகவும் சிக்கலான நிலையில் உள்ளதால், .எஸ், இராணுவ ரீதியாக தோற்றகடிக்கப்பட்டதன் பின்னர், அங்கு ஆட்சியும் சமூக ஐக்கியமும் சவாலுக்கு உட்படும் என்பது புலனாகின்றது.